நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்க சிறப்புவிசாரணைக் குழு

 நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்க சிறப்புவிசாரணைக் குழு நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்க சிறப்புவிசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என பா.ஜ.க., மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவருமான அருண்ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ. விசாரணையில் மத்தியஅரசு தலையிடுகிறது . இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் பதவி விலகவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்

கடந்த 2004-ஆம் வருடம் முதல் மத்தியஅரசு மேற்கொண்ட நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் அரசக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமைகணக்கு தணிக்கையாளர் குற்றம் சுமத்தியிருந்தார் . இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் சிபிஐ. இயக்குநரை அழைத்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினிகுமார் பேசினார். அதன் பிறகு , சிபிஐ. அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து அருண்ஜேட்லி கூறியதாவது: மத்திய அரசு சிபிஐ.யை சுதந்திரமாகசெயல்பட அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக சிபிஐ.யால் உண்மைகளை கண்டறிய முடியவில்லை. அதையும் தாண்டி சிலநேர்மையான அதிகாரிகள் தீவிரமாக செயல்படமுனைந்தால், அதை ஐ.மு.,கூட்டணி அரசு தடுக்கிறது; வஞ்சகமாக செயல் படுகிறது. வழக்கு பற்றிய முழுவிவரத்தை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவிடாமல் சிபிஐ.யை தடுப்பதன் மூலம், நீதித் துறையின் செயல்பாட்டிலும் இந்த அரசு குறுக்கிடுகிறது.

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் திருத்த படாத முந்தைய அறிக்கையை சிபிஐ., உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்வதுடன், மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அதை பகிரங்கமாக வெளியிடவேண்டும்.

நாட்டில் பலபகுதிகளில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களுக்கு போதிய நிலக்கரி கிடைக்காத நிலையில், தனக்கு வேண்டிய வர்களுக்கு மத்தியஅரசு முறைகேடாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடுசெய்துள்ளது.

இப்போது சிபிஐ.யின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுவது தெரியவருகிறது . இதனால், இந்தவழக்கில் சிபிஐ.யால் நேர்மையான விசாரணையை மேற்கொள்ளமுடியாது. எனவே, சிறப்புவிசாரணைக் குழுவை அமைத்து, அதனிடம் இந்தவழக்கை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...