நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்க சிறப்புவிசாரணைக் குழு

 நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்க சிறப்புவிசாரணைக் குழு நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்க சிறப்புவிசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என பா.ஜ.க., மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவருமான அருண்ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ. விசாரணையில் மத்தியஅரசு தலையிடுகிறது . இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் பதவி விலகவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்

கடந்த 2004-ஆம் வருடம் முதல் மத்தியஅரசு மேற்கொண்ட நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் அரசக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமைகணக்கு தணிக்கையாளர் குற்றம் சுமத்தியிருந்தார் . இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் சிபிஐ. இயக்குநரை அழைத்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினிகுமார் பேசினார். அதன் பிறகு , சிபிஐ. அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து அருண்ஜேட்லி கூறியதாவது: மத்திய அரசு சிபிஐ.யை சுதந்திரமாகசெயல்பட அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக சிபிஐ.யால் உண்மைகளை கண்டறிய முடியவில்லை. அதையும் தாண்டி சிலநேர்மையான அதிகாரிகள் தீவிரமாக செயல்படமுனைந்தால், அதை ஐ.மு.,கூட்டணி அரசு தடுக்கிறது; வஞ்சகமாக செயல் படுகிறது. வழக்கு பற்றிய முழுவிவரத்தை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவிடாமல் சிபிஐ.யை தடுப்பதன் மூலம், நீதித் துறையின் செயல்பாட்டிலும் இந்த அரசு குறுக்கிடுகிறது.

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் திருத்த படாத முந்தைய அறிக்கையை சிபிஐ., உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்வதுடன், மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அதை பகிரங்கமாக வெளியிடவேண்டும்.

நாட்டில் பலபகுதிகளில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களுக்கு போதிய நிலக்கரி கிடைக்காத நிலையில், தனக்கு வேண்டிய வர்களுக்கு மத்தியஅரசு முறைகேடாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடுசெய்துள்ளது.

இப்போது சிபிஐ.யின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுவது தெரியவருகிறது . இதனால், இந்தவழக்கில் சிபிஐ.யால் நேர்மையான விசாரணையை மேற்கொள்ளமுடியாது. எனவே, சிறப்புவிசாரணைக் குழுவை அமைத்து, அதனிடம் இந்தவழக்கை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...