பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடியை நிறுத்தமாட்டோம் என நாங்கள் முன்பு உறுதியளிக்கவில்லை என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் நிதின்கட்காரி தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
வரும் 2014-ம் வருடம் தேர்தலுக்குப்பிறகு மக்களவை தலைவர் யார் என்பதுகுறித்து முன்னரே நிதிஷ்குமார் பிரச்சினை எழுப்பியிருந்தார். அதுகுறித்து 2012-ம் ஆண்டே ராஜ்யசபா தலைவர் அருண்ஜேட்லி வீட்டில் நாங்கள் மூன்று பேரும் சந்தித்துபேசினோம்.
அப்போது, யார் பிரதமர் வேட்பாளர் என்பது பற்றி தேர்தலுக்கு முன்போ, அல்லது பிறகோ பாஜக தலைமை தக்கதருணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் என்று கூறியிருந்தோம்.
ஆனால், வரும் 2014 ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என நானும், அருண்ஜேட்லியும் அப்போது நிதிஷ் குமாருக்கு எந்த உறுதியும் கொடுக்க வில்லை. என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.