ராகுல்காந்தியின் பேச்சு சாத்தான் கீதை ஓதுவதை போன்றது

ராகுல்காந்தியின் பேச்சு  சாத்தான் கீதை ஓதுவதை போன்றது ஊழலை பற்றி காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி பேசுவது சாத்தான் கீதை ஓதுவதை போன்று உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் அவர் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது ; காங்கிரஸின் ஊழல் பூமியோடு நின்று விடவில்லை அதையும்தாண்டி ஆகாயத்தை தொட்டு விட்டது , பாதாளத்தையும் தொட்டு விட்டது . இந்த அரசு காங்கிரஸ் மூன்று உலகங்களிலும் தனது ஊழல்சிறகை விரித்துள்ளது. மேலும் ஊழலைப்பரப்ப அதற்கு இடமில்லை.

பா.ஜ.க.,வை குறை கூறும் முன்பு ராகுல் ஐ.மு., கூட்டணி அரசின் இமேஜை முதலில் ஒழுங்கு படுத்தட்டும். பலலட்சம் கோடி ஊழல் வழக்குகளில் காங்கிரஸுக்கு தொடர்புண்டு . கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு பிறர் மீது கல்லை வீசக்கூடாது என்ற பொது அறிவுகூட காங்கிரஸுக்கு இல்லையே.

பாஜக.,வில் என்னதான் உட்கட்சிபூசல் இருந்தாலும் அது மாநிலத்தின் வளர்ச்சியை ஒருபோதும் பாதித்ததில்லை. காங்கிரஸில் ஒற்றுமையே இல்லை. முதல்வர்பதவிக்கு வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸில் ஒருமுறையும் இல்லை. அதனால் முதல்வர் பதவிக்கு பலர் அடித்துக்கொள்கின்றனர். ஆனால் பா.ஜ.க.,வின் நிலை அப்படி இல்லை. ஜெகதீஷ் ஷெட்டர்தான் முதல்வர் வேட்பாளர் என நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...