தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தி.மு.க., தோற்கடிக்கப்படவேண்டும் என நாகர்கோவிலில் நடந்த குமரி கோட்ட பா.ஜ., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார,

கன்னியாகுமரி, திருநெல்வேலி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி மாவட்டங்கள் சேர்ந்த குமரி கோட்ட பா.ஜ., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பாஜ., அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி துணை தலைவர் ராஜேஷ்பாபு தலைமை வகித்தார,

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது;-பா.ஜ., தாமரை யாத்திரை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கி.மீ., தூரம் சென்று லட்சக்கணக்கான மக்களை நேரில் சந்தித்து வரும் 29ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. இந்நிகழ்ச்சியில் அகில பாரத தலைவர் நிதின்கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.தமிழக அரசியல் வரலாற்றில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி சம்பந்தமாக ஆலோசசனை நடத்தி வருகின்றன. எந்த கட்சியோடு கூட்டணி தொடரலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால் பா.ஜ.,வை பொறுத்தவரை நம்மை நாம் பலப்படுத்தி கொள்ளவேண்டும். அதனை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்கு எதிர்கட்சிகள் அனைத்து கட்சிகள் ஒன்று சேர்ந்து தோற்கடிக்க முன்வரவேண்டும். தி.மு.க.,வை விட காங்., கட்சி தீங்கானது. கடந்த 56 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வரும் காங்., கட்சி ஊழலில் திளைத்து வருகிறது. மிக பெரிய ஊழல் நடத்தி வருகிறது. அது ஆளும் மாநிலங்களில் அனைத்திலும் ஊழலில் மிதந்து வருகிறது. அது போன்று அதன் கூட்டணி கட்சியான தி.மு.க., வும் ஊழலில் திளைத்து வருகிறது.

2010ல் மிக பெரிய மெகா ஊழல் நடந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேறினால், தி.மு.க., வுடன் கூட்டணி யார் வைத்துக்கொள்வார்கள் என தி.மு.க., வினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.இதனால், தி.மு.க.,- காங்., கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நாம் நம் பங்கை ஆற்றவேண்டும். பா.ஜ.,வை பொறுத்தவரை நல்ல இளைஞர்கள் உள்ளனர். மக்கள் நம் பக்கம் உள்ளனர். நாம் நம் கடமையை செய்வோம். நம் பணியை தொடர்ந்து செய்வோம். இதற்கான ஆலோசனை கூட்டம் தான் இன்று குமரி கோட்ட இளைஞரணி சார்பில் நடத்தப்படுகிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.