சாணக்கியரின் நேர்மை!

 சாணக்கியரின் நேர்மை! வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவ கதை…
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திர குப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல்மேதை. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.

ஒரு நாள் அரசவைக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்றமுறையில் எழுந்து, ''மன்னா! நம்மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங் குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசுசெலவில் கம்பளிப்போர்வை கொடுத்து உதவவேண்டும்'' என்றார்.

"தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள்கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப்போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அந்தப்பொறுப்பை தங்களிடமே ஒப்படைக்கிறேன்'' என்றார் அரசர்.

அதன்படியே ஏழைகளுக்கு வழங்கவேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் சந்திரகுப்தர்.

சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்துவந்தார். கம்பளிப்போர்வை பற்றிய விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்கு தெரிய வந்தது. கம்பளி போர்வைகளை திருடிவிற்றால் பலஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என திட்டமிட்டார்கள்.

குளிர் காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். கம்பளிப்போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

சற்றுத்தள்ளி ஒரு கிழிந்த கம்பளியை போர்த்திக்கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒருபழைய கிழிந்த போர்வையை போர்த்திக்கொண்டு படுத்திருந்தார். அதைப்பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக்கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண்விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே 3 திருடர்கள். அவர்களில் ஒருவன், "ஐயா! நாங்கள் உங்கள்வீட்டில் உள்ள கம்பளிகளை திருடவந்தோம். இவ்வளவு புதியகம்பளிகள் குவிந்திருக்கும் போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்துபோன பழைய கம்பளியை போர்த்தி கொண்டிருக்கின்றீர்களே… இவற்றில் இரண்டை எடுத்து கொள்ள கூடாதா?'' என்றான்.

அதற்கு சாணக்கியர், "அவை எங்களுக்கு சொந்தமானவையல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப் படவிருக்கும் அரசாங்கப்பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன் படுத்த முடியும்? '' என்றார் சாணக்கியர்.

திருடர்கள் சாணக்கியரின் கால்களில்விழுந்து வணங்கினார்கள். "எங்களை மன்னித்துவிடுங்கள். இனி பிறருக்கு சொந்தமான பொருள்களை திருடவே எண்ணமாட்டோம்'' என்று சத்தியம்செய்தார்கள்.

என்ன இளைஞனே! சாணக்கியரின் செயலை கவனித்தாயா? இந்த கதையை குறிப்பிட்டதன் காரணம், பொதுவாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்குத்தான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...