மனு சாஸ்திரமா? ஷரியத் சட்டமா?

 ஏப்ரல் 14 அன்று தி.க.வின் ஒரு பிரிவினர் மனுசாஸ்திரம் எரிப்பு போராட்டம் நடத்தினர். மனுசாஸ்திரம் ஜாதி பிரிவினையைத் தூக்கிப்பிடிப்பதாக காரணம் கூறினார்கள்.

மனுசாஸ்திரம் யாருக்காவது தெரியுமா?

மனுசாஸ்திரம் என்பது என்ன என்றுகூட இன்றைய தலைமுறைக்குத் தெரியாது! அது நடைமுறையில் எந்த விதத்திலும் இல்லை. மக்களிடமும் மனுசாஸ்திரம் நடைமுறையில் இல்லை என்பதைவிட மனுசாஸ்திரத்தைப் பார்த்து யாரும் இங்கு ஜாதியை பின்பற்றுவதே, ஜாதிய பகுப்பாட்டை அடையாளப்படுத்துவதோ இல்லை. எல்லாம் அரசியல்! எல்லாம் ஒட்டு வங்கி நாடகம்!

மனுசஸ்திரத்திற்கு மக்கள் அங்கீகாரமோ,சட்ட அங்கீகாரமோ கிடையாது என்பது அப்பட்டமான உண்மை.

மூட நம்பிக்கை, மக்களை பாகுபாடு படுத்தும் நூலை எரித்து எதிர்ப்பைக் காட்ட வேண்டுமானால் நடைமுறையில் உள்ளதைத்தான் இவர்கள் கையில் எடுக்க வேண்டும்.

அது ஷரியத் சட்டம்தான்..!

பெண் அடிமைத்தனம், பால்ய விவாகம், பலதார மணம் என எண்ணற்றப் பிரச்சனைகளில் ஷரியத் சட்டம் துணைநிற்கிறது.

திருமணப் பதிவை கட்டாயப்படுத்தினால் அதனை ஏற்க மாட்டோம், ஷரியத் சட்டப்படிதான் நடத்துவோம் என்று முஸ்லீம்கள் கூச்சலிடுகிறார்கள்.

ஷரியத் சட்டம் முஸ்லீம் மத சட்டமாக இந்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.நடைமுறையில் மூட நம்பிக்கையை வளர்க்கும் ஷரியத் சட்டத்தைப் பற்றி வாய் திறக்காத இந்த தி.க. வீரர்களை என்னவென்று சொல்வது?

இந்த ஷரியத் சட்டப்படி ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலே திருமணம் செய்யலாம் என்று அறிவியலுக்குப் புறம்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதனை ஏன் திராவிட அமைப்புகள் எதிர்க்கவில்லை.

சட்டசபையில் இதைப்பற்றி விவாதம் வந்தபோது எந்தக் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. சிறு முணுமுணுப்புக்கூட செய்யவில்லை! ஏன்?

பெண்கள் பர்தாவெனும் முக்காடுக்குள் முடங்கிப் போக வேண்டும், முல்லா, மௌல்விகள் மட்டுமே நிக்காவை நடத்தி வைப்பார்கள், நிக்காவை (முஸ்லீம் திருமணத்தை) பதிவு செய்வதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூக்குரல் விடுத்தார்களா? இல்லையே !

மூட நம்பிக்கை, மதப் பிடிவாதம், மக்களைத் தங்கள் பிடியில் அமுக்கிப்பிடிக்கவே ஷரியத் சட்டம் என்பது வெட்டவெளிச்சம்!

மதத்திற்கு ஒரு சட்டம் என்பது மதவாதத்தின் அடிப்படைதானே!

அதனைத்தானே அண்ணல் அம்பேத்கர் நீக்கி பொது சிவில் சட்டம் .. அனைவருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றமும் அதனைத் தானே சொல்லி வருகிறது.

அப்படியிருக்கையில் ஏன் எதிர்க்கவில்லை ? ஏன் எரிக்கவில்லை?

இவர்கள் தொடை நடுங்கிக்கூட்டம்! ஒரு சமயம் ஈ.வே. ரா. முஸ்லீம் பற்றி பேசியபோது, முஸ்லீம்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டு, நடுங்கிப்போன ஈ.வே.ரா.! அதன் பிறகு வாய் திறப்பதில்லை!

இவர்களது நோக்கம் இந்துக்களை சீண்டிப்பார்ப்பதுதான். மட்டம் தட்டுவது தான்! அதற்கு இவர்களிடம் கிடைத்தது நமுத்து போன

வெடியான மனுசாஸ்திரம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...