நெல்லையில் தனியார் ஹோட்டலில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளுடன், தமிழக பா.ஜ.க., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது
தமிழகத்துக்கு காவிரி நீர் தராத கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆட்சியை கலைக்கவேண்டும். தண்ணீர் பொதுவானது. சேதுசமுத்திர திட்டத்தை நாங்கள் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அதில் உள்ள ராமர்பாலத்தை இடிக்கக்கூடாது. தமிழகத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகிறது. அதனை இரும்புகரம் கொண்டு ஒடுக்கவேண்டும். முன்பு எம்ஜிஆர். தனது ஆட்சிக்காலத்தில் இதனை அடக்க கடும்முயற்சி மேற்கொண்டார். அதனைப் போன்றே இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். பெரியகுளம், வருச நாடு, தேனி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரவாத நடமாட்டம் தென்படுகிறது.
காங்கிரஸ்கட்சி எல்லா வகையிலும் தோற்றுவிட்டது. அந்த ஆட்சியை அப்புறப் படுத்துவதற்கு எந்தகட்சிகள் முன்வருகிறதோ, அந்தக்கட்சிகளுடன் பா.ஜ.க கூட்டணிவைக்கும். வருகின்ற 7, 8 தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ள அகில இந்திய பா.ஜ.க.,வின் செயற்குழுகூட்டத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துச் சொல்லப்படும் என்றார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.