பலநாள் குடைச்சல் ஒருவழியாக வெளியேறிவிட்டது

 பலநாள் குடைச்சல் ஒருவழியாக வெளியேறிவிட்டது . பொறமை , வஞ்சனை நிரம்பியவர்கள் எத்தனை காலத்துக்குத்தான் நண்பனாக நடிக்க முடியும் வெளியேறிவிட்டார்கள் . நிதிஷ் குமாரின் வெளியேற்றம் பாஜக.,விற்கு சிறு பின்னடைவுதான். ஆனால் கடந்த நான்கு

வருடங்களாக பாஜக.,வின் காங்கிரஸ்க்கு எதிரான பல போராட்டங்களை அவ்வப்போது மோடிக்கு எதிராக பேசி திசை திருப்பி பிசுபிசுக்க வைத்த இந்த நிதிஷ்கள் என்றோ வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்பதே உண்மை.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜக.,வின் 17 வருட நண்பன் என்று கூறுவதை விட சகோதரன் என்று கூறுவதே பொருந்தும். பாரதிய ஜனதா அவர்களை சகோதரனாக கருதியதால் தான் 2002 ம் ஆண்டு 67 எம்.எல்.ஏ .,க்களை வென்றபோதும் முதல்வர் பதவிக்கு போட்டியிடாமல் 34 இடங்களை வென்ற ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரை முதல்வராக முன்னிலை படுத்தியது .

எப்படி 34 எம்.எல்.ஏ க்களை வைத்து முதல்வர் ஆனாரோ அதேபோன்று 20, 25 எம்.பி.,க்களை வைத்து பிரதமராகலாம் என்று கனவுகாண ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் தான் மோடியின் விஸ்வரூபம் எங்கே தன் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விடுமோ என்று அஞ்சினார் , பொறமை கொண்டார் , எரிச்சல் கொண்டார், இறுதியாக பொறுக்கமுடியாமல் பாஜக.,வில் இருந்து விலகி திடீர் என மதசார்பற்றவராகவும் மாறிவிட்டார்.

நிதிஷ் குமார் மோடியை மதவாதி என்று எந்த வாயால் சொல்கிறாரோ அதே வாயால்தான் நரேந்திர மோடியின் சேவை குஜராத்தையும் தாண்டி தேவை என்று கூறினார். 2002 ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு பிறகு நடந்த ஒரு ரயில்வே விழாவில், மோடி முன்னிலையில், நிதிஷ்குமார் பேசியதாவது : "நரேந்திர மோடி.எதிர் காலத்தில் குஜராத்திற்கு வெளியே ஒரு தலைவராக உருவாகக்கூடியவர் நீண்ட நாட்களுக்கு அவர், குஜராத்திற்கு உள்ளேயே இருக்க முடியாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். அவரது சேவை நாடு முழுமைக்கும் தேவை. குஜராத்தில் ஏராளமான வளர்ச்சிபணிகளை செய்துள்ள மோடியை நான் பாராட்டுகிறேன். ஆனால், குஜராத்திற்குவெளியே அவரைப் பற்றி, தவறான கருத்து பரவி உள்ளது. குஜராத்தில் நடந்துள்ள வளர்ச்சிப்பணிகள் பற்றி, வெளியே அதிகம் தெரியவில்லை. அவற்றை சரியாக விளம்பரப்படுத்த வேண்டும். மோடியை நான் மீண்டும் பாராட்டுகிறேன்". என்று கூறுகிறார்.

மேலும் 2004 லோக்சபாதேர்தல் முடிவுகள் வெளியானபோது ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்துகள் இது.."பாஜக.,வின் புதிய முகம் நரேந்திர மோடிதான்..அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்தவர். .அவரை ஒரு முறை நேரில் சந்தித்தால் அவர்மீது ஈர்ப்பு உள்ளவராக மாறி விடுவீர்கள்… மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்துவந்தவர்… நான் அவரது ரசிகனும் கூட என்கிறார்.

ஆகமொத்தத்தில் நிதிஷ் குமாரின் கூற்றுப்படி நரேந்திர மோடி குஜராத்துக்கு வெளியே வந்துவிட்டார். நிதிஸ் குமாரின் விருப்பத்தையும் கிட்டத்தட்ட நிறைவேற்றவும் போகிறார். ஆனால் தன் விருப்பத்தையே , தன் சொல்லையே எதிர்க்கும் நிதிஷின் செயல் ஒரு வேடிக்கையே பாஜக.,வில் இருந்து வெளியேறி விட்டதால் இவரை மதசார்பற்றவர் என்று ஆராதிக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ்ஸின் ஆதரவை பெற்றுவிட்டதால் இவரை எதிர்கால ஊழல்வாதி என்றே நாம் ஆராதிபோம்

தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...