ஜுன்28ல் நடக்கவிருந்த சிறைநிரப்பும் போராட்டம் ஒத்திவைப்பு

ஜுன்28ல் நடக்கவிருந்த  சிறைநிரப்பும் போராட்டம் ஒத்திவைப்பு பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

உத்தராகண்டில் வரலாறுகாணாத இயற்கை சீற்றத்தால் உண்டான

பேரழிவுகாரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் உரிய உதவி கிடைக்கப்பெறாமல் பரிதவித்து வருகின்றனர்.

பாஜக.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில்சென்று பார்வையிட்டு, தேசியபேரிடராக இதை உடனே அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசியபேரிடர் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு பாஜக., சார்பில் நடக்கவிருந்த மத்திய அரசுக்கு எதிரான சிறைநிரப்பும் போராட்டத்தை ஒத்திவைக்க கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போது கட்சிதொண்டர்கள் அனைவரும் சேவைமனப்பான்மையுடன் பேரிடரால் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம்நீட்டவும், நிதி உதவி அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் ஜுன்28ல் நடக்கவிருந்த, மத்திய அரசுக்கு எதிரான சிறைநிரப்பும் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அதே நாளில் தமிழக பாஜக.,வினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர்துடைக்க மக்களிடம் நிதிவசூல் செய்ய வேண்டுமெனவும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...