தேமுதிக பாராளுமன்ற தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைக்கவேண்டும்

தேமுதிக  பாராளுமன்ற தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளால் தனித்துவிடப்பட்ட தேமுதிக வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக. முடிவு எடுத்தால் நாட்டின் நலன்கருதி அதை கருத்தில்கொள்வோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் காங்கிரசோடு கூட்டணிஅமைத்தாலும் அது தமிழர்களுக்குசெய்யும் துரோகம் ஆகும். திமுக. 2004 முதல் 2013 தொடக்கம்வரை மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம்வகித்து, ஆட்சியில் பங்குபெற்று இருந்தது. அந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களின் பேரழிவுக்கு காரணமாக இருந்ததை யாராலும்மறைக்க முடியாது.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதற்கும் இலங்கை பிரச்சினையைத் தான் திமுக. காரணம்காட்டியது. இப்போது ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் வாக்குகளைபெற்றதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் வருகிறதேர்தலில் திமுக. காங்கிரசோடு கைகோர்த்தால் வரலாறுமன்னிக்காது.

மத்தியில் ஆளும் இந்த காங்கிரஸ் வீழ்வதற்கு ஊழல், விலைவாசி உயர்வு, தவறானபொருளாதார கொள்கைகள் என்று பலகாரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை இலங்கை தமிழர்களை அழித்த காங்கிரசுக்கு பாடம்புகட்ட வேண்டும் என கருதுகிறேன்.

காங்கிரசுடன் கூட்டணியமைக்கும் எவராக இருந்தாலும் தமிழ் இன துரோகிகளாகவே கருதப் படுவார்கள். காங்கிரஸ் தேமுதிக.வை ஏமாற்றியது எதிர்பார்த்ததுதான். நாட்டையே ஏமாற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இது புதியவிசயம் அல்ல. என்னை பொறுத்தவரை தேமுதிக. தனித்து விடப்பட்டதாக கருதவில்லை.

காங்கிரசை அகற்றுவதில் தேமுதிக.வுக்கு மிகமுக்கிய பொறுப்பு இருக்கிறது. அதுபற்றி அவர்கள் சிந்திப்பார்கள் என கருதுகிறேன். நாட்டின் நலன்கருதியும், செய்த துரோகத்துக்காகவும் தேமுதிக. சரியானமுடிவு எடுத்து காங்கிரசை வீழ்த்தவேண்டும்
என்று அவர் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...