வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தவறிய மாநில அரசை நீக்கவேண்டும்

 வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தவறிய மாநில அரசை நீக்கவேண்டும் உத்தரகண்டில் வெள்ள நிவாரணப்பணிகளை உரியமுறையில் மேற்கொள்ள தவறிய மாநில அரசை நீக்கவேண்டும் என்று மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் “டுவிட்டர்’ இணைய தளத்தில் திங்கள் கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உத்தரகண்ட் அரசு, வெள்ள சேதத்தை உரியவகையில் கையாளவில்லை. நிவாரணப்பணிகளை மேற்கொள்ள திறனற்று இருக்கும் அந்த அரசை உடனடியாக நீக்கவேண்டும்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே பாஜக. தலைவர்கள் உத்தரகண்ட்க்கு பயணம் மேற்கொள்ளவில்லை. அங்கு விஐபி.க்கள் யாரும் செல்லவேண்டாம் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதாலேயே நாங்கள் அங்கு செல்லவில்லை.

இந்த விவகாரத்தை பொறுத்த வரை, உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரம் குறித்து நான் தான் மத்திய அரசை உஷார் படுத்தினேன். உள்துறை அமைச்சருடன் கடந்தமாதம் 18ஆம் தேதி தொலை பேசியில் பேசியபோது, அந்தமாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மை குறித்து நான் அவரிடம் எடுத்துக்கூறினேன்.

ஆட்சியின் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும்போது, அவை அரசியல் செய்வதாக கூறி அரசு தப்பித்துக்கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தோல்விகளை மறைத்து, தப்பிக்கமுடியாது. உத்தரகண்டில் மத்திய அரசு எதையும்செய்யவில்லை. அங்கு அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் ராணுவம், விமானப்படை, இந்தியதிபெத் எல்லை பாதுகாப்புப் படை ஆகியவை தங்களின் உயிரைப் பணயம்வைத்து மேற்கொண்டன. ஆனால் இந்தப்பணிகள் அனைத்தையும் தாங்களே மேற்கொண்டதாக அரசு உரிமை கோர கூடும்.

ராணுவம் , துணை ராணுவ படையினரின் முயற்சிகளுக்காக அவர்களை வணங்குகிறேன். இந்தவிஷயத்தில் மாநில அரசும் எதையும் செய்யவில்லை. அங்கு மக்கள் பட்டினிகிடக்கிறார்கள்.

இறந்தவர்களின் உடல்களில்இருந்து தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப் படுகின்றன. நெருக்கடியான நேரத்தில் ஆட்சி நடத்த முடியாதவர்கள், ஒருநாள் கூட ஆட்சியில் நீடிக்க தகுதியற்றவர்கள் என சுஷ்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...