உத்தரகாண்ட் திணறும் விஜய் பகுகுணா

 உத்தரகாண்ட் திணறும் விஜய் பகுகுணா உத்தரகாண்ட் வெள்ளப் பேரழிவை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவவீரர்கள் அங்கு முகாமிட்டு மீட்புப்பணிகளை செய்துவருகிறார்கள். மீட்புப் பணிகளை இராணுவம் மிக வேகமாக துரிதபடுத்தியுமே அதை செய்து முடிப்பதற்கு சுமார் 16 நாட்கள் ஆகிவிட்டது. மீட்புப்பணிகளில் உத்தரகாண்ட் மாநில ஆளும் காங்கிரஸ் அரசு மிகவும் மெத்தனமாக இருந்ததே இதற்குகாரணம் என்று புகார்கள் வந்துள்ளன.

முதல்வர் விஜய் பகுகுணா பேரழிவு ஏற்பட்டதும் விரைந்து செயல்படவில்லை . மத்திய அரசும் பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. பாஜக. மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததாலும், நரேந்திர மோடி நேரடியாக கலத்தில் இறங்கியதாலுமே விழித்து கொண்ட காங்கிரஸ் அரசு 4 நாட்கள் கழித்து மெதுவாக நிவாரண பணிகளை தொடங்கியது.

குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி உத்தரகாண்ட் பேரழிவுபற்றி அறிந்ததும் உடனடியாக அந்த மாநிலதலைநகர் டேராடூனுக்கு சென்று முகாமிட்டு தன்மாநிலத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை மீட்டு அழைத்துசென்றார். இரண்டே நாளில் அவர் அந்த மீட்புப்பணியை முடித்துவிட்டார்.

அதன்பிறகும் கூட உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுணா வேகம் காட்டவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகளை சரியாக செய்யாததால் உத்தரகாண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என பாஜக. மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மாசுவராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் விஜய் பகுகுணா மீது உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சி யினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேரழிவு மீட்புபணிகளை திட்டமிட்டு செய்யதெரியவில்லை என அவர்கள் பகுகுணாவை குறைகூற தொடங்கியுள்ளனர்.

விஜய் பகுகுணா மிக மெல்ல செயல்படுவதாகவும் , உயிரிழந்தவர்கள் குறித்து எதையும் சொல்ல தெரியவில்லை என்றும் விஜய் பகுகுணா மீது அவர்கள் குறை கூறியுள்ளனர். .

மத்திய நீர் வளத்துறை மந்திரி ஹரீஸ்ராவத் உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை கடுமையாக விமர்சித்துவருகிறார். இது குறித்து அவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...