உத்தரகாண்ட் திணறும் விஜய் பகுகுணா

 உத்தரகாண்ட் திணறும் விஜய் பகுகுணா உத்தரகாண்ட் வெள்ளப் பேரழிவை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவவீரர்கள் அங்கு முகாமிட்டு மீட்புப்பணிகளை செய்துவருகிறார்கள். மீட்புப் பணிகளை இராணுவம் மிக வேகமாக துரிதபடுத்தியுமே அதை செய்து முடிப்பதற்கு சுமார் 16 நாட்கள் ஆகிவிட்டது. மீட்புப்பணிகளில் உத்தரகாண்ட் மாநில ஆளும் காங்கிரஸ் அரசு மிகவும் மெத்தனமாக இருந்ததே இதற்குகாரணம் என்று புகார்கள் வந்துள்ளன.

முதல்வர் விஜய் பகுகுணா பேரழிவு ஏற்பட்டதும் விரைந்து செயல்படவில்லை . மத்திய அரசும் பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. பாஜக. மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததாலும், நரேந்திர மோடி நேரடியாக கலத்தில் இறங்கியதாலுமே விழித்து கொண்ட காங்கிரஸ் அரசு 4 நாட்கள் கழித்து மெதுவாக நிவாரண பணிகளை தொடங்கியது.

குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி உத்தரகாண்ட் பேரழிவுபற்றி அறிந்ததும் உடனடியாக அந்த மாநிலதலைநகர் டேராடூனுக்கு சென்று முகாமிட்டு தன்மாநிலத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை மீட்டு அழைத்துசென்றார். இரண்டே நாளில் அவர் அந்த மீட்புப்பணியை முடித்துவிட்டார்.

அதன்பிறகும் கூட உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுணா வேகம் காட்டவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகளை சரியாக செய்யாததால் உத்தரகாண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என பாஜக. மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மாசுவராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் விஜய் பகுகுணா மீது உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சி யினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேரழிவு மீட்புபணிகளை திட்டமிட்டு செய்யதெரியவில்லை என அவர்கள் பகுகுணாவை குறைகூற தொடங்கியுள்ளனர்.

விஜய் பகுகுணா மிக மெல்ல செயல்படுவதாகவும் , உயிரிழந்தவர்கள் குறித்து எதையும் சொல்ல தெரியவில்லை என்றும் விஜய் பகுகுணா மீது அவர்கள் குறை கூறியுள்ளனர். .

மத்திய நீர் வளத்துறை மந்திரி ஹரீஸ்ராவத் உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை கடுமையாக விமர்சித்துவருகிறார். இது குறித்து அவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...