உத்தரகாண்ட் திணறும் விஜய் பகுகுணா

 உத்தரகாண்ட் திணறும் விஜய் பகுகுணா உத்தரகாண்ட் வெள்ளப் பேரழிவை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவவீரர்கள் அங்கு முகாமிட்டு மீட்புப்பணிகளை செய்துவருகிறார்கள். மீட்புப் பணிகளை இராணுவம் மிக வேகமாக துரிதபடுத்தியுமே அதை செய்து முடிப்பதற்கு சுமார் 16 நாட்கள் ஆகிவிட்டது. மீட்புப்பணிகளில் உத்தரகாண்ட் மாநில ஆளும் காங்கிரஸ் அரசு மிகவும் மெத்தனமாக இருந்ததே இதற்குகாரணம் என்று புகார்கள் வந்துள்ளன.

முதல்வர் விஜய் பகுகுணா பேரழிவு ஏற்பட்டதும் விரைந்து செயல்படவில்லை . மத்திய அரசும் பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. பாஜக. மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததாலும், நரேந்திர மோடி நேரடியாக கலத்தில் இறங்கியதாலுமே விழித்து கொண்ட காங்கிரஸ் அரசு 4 நாட்கள் கழித்து மெதுவாக நிவாரண பணிகளை தொடங்கியது.

குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி உத்தரகாண்ட் பேரழிவுபற்றி அறிந்ததும் உடனடியாக அந்த மாநிலதலைநகர் டேராடூனுக்கு சென்று முகாமிட்டு தன்மாநிலத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை மீட்டு அழைத்துசென்றார். இரண்டே நாளில் அவர் அந்த மீட்புப்பணியை முடித்துவிட்டார்.

அதன்பிறகும் கூட உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுணா வேகம் காட்டவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகளை சரியாக செய்யாததால் உத்தரகாண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என பாஜக. மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மாசுவராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் விஜய் பகுகுணா மீது உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சி யினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேரழிவு மீட்புபணிகளை திட்டமிட்டு செய்யதெரியவில்லை என அவர்கள் பகுகுணாவை குறைகூற தொடங்கியுள்ளனர்.

விஜய் பகுகுணா மிக மெல்ல செயல்படுவதாகவும் , உயிரிழந்தவர்கள் குறித்து எதையும் சொல்ல தெரியவில்லை என்றும் விஜய் பகுகுணா மீது அவர்கள் குறை கூறியுள்ளனர். .

மத்திய நீர் வளத்துறை மந்திரி ஹரீஸ்ராவத் உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை கடுமையாக விமர்சித்துவருகிறார். இது குறித்து அவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...