கல்வி உதவிவழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது,’ என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் . “இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும்,’ என கோரி, மாவட்ட பா ஜ.க ., சார்பில், அன்னூரில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் பா.ஜ.க., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்துக்களுக்கு ஆண்டுவருமானம், 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். இதில் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
ஆனால் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், இரண்டரை லட்சம்வரை ஆண்டு வருமானம் இருந்தாலும் உதவித் தொகை பெறலாம். முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்ப ட்டவர்கள் எனும் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஓட்டுக்காக சிறுபான்மையினரை காங்கிரஸ் தாஜாசெய்கிறது. இவ்வாறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 2,500க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். திருவோடு ஏந்தி பள்ளி, கல்லூரிமாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.