உ.பி சமாஜவாதி அரசை நீக்கிவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும்

 உ.பி.,யின் முசாஃபர் நகரில் நடந்த வகுப்பு கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய சமாஜவாதி அரசை நீக்கிவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

வரும் மக்களவை தேர்தலுக்கான உத்திகள்குறித்து, அசாம்மாநிலம் குவாஹாட்டியில், வட கிழக்கு மாநில பா.ஜ.க தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் புதன்கிழமை ஆலோசனை மேற்க்கொண்டார் . அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உ.பி முசாஃபர் நகரில் நடந்த வகுப்பு கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய சமாஜவாதி அரசை நீக்கிவிட்டு, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்தவேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற இதைத்தவிர வேறுவழி தெரியவில்லை.

மத்திய அரசு இந்தவிவகாரத்தில் தலையிட்டு சமாஜ வாதி அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். முசாஃபர் நகரில் நிலவிவரும் பதற்றம் குறித்து தனியார் தொலைக் காட்சிகளில் செவ்வாய்க் கிழமை ஒளிபரப்பிய காட்சிகளின் அடிப்படையில் உரியநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சமாஜவாதி அரசுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத்தயங்கினால் அக்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக உத்தரப்பிரதேச மக்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள். காங்கிரஸ் அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி ஆட்சியை தக்கவைக்க விரும்புகிறது என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...