ஒசாமா பின்லேடனை போன்று ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிமை சுட்டுக்கொல்ல வேண்டும்

 தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதை போன்று ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளேயே வைத்து சுட்டுத்தள்ள வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு அவர் பதில்அளித்து கூறியதாவது:-

பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து ராணுவத்தி னரையும், குடிமக்களையும் கொன்றுசெல்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நேரம் நரேந்திரமோடி பிரதமராக இருந்து இருந்தால், இந்தியசொல்படி பாகிஸ்தான் நடந்திருக்கும். ஆனால் நமது பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மீண்டும் இதுபோன்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டே தான் இருந்தாகவேண்டும்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் அதிகமானோர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகதெரியும். இனி பேச்சுவார்த்தைக்கு இங்கு என்னஇருக்கிறது. ஒருநாட்டின் பிரதமர் நடந்துகொள்ள வேண்டியபடி நம்பிரதமர் நடந்து கொள்ளவில்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து சிலவற்றை மன்மோகன்சிங் கற்றுக்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்துகொண்டு அவர் பாகிஸ்தானை தாக்கினார். தீவிரவாதி ஒசாமாபின்லேடனை சுட்டுக் கொன்றார். இன்று சிரியாவை மிரட்டும்வல்லமையை பெற்றுள்ளார்.

அது போன்று பிரதமர், ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளே சுட்டுத்தள்ளவேண்டும் என்று அவர் பதிலளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.