ஒசாமா பின்லேடனை போன்று ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிமை சுட்டுக்கொல்ல வேண்டும்

 தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதை போன்று ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளேயே வைத்து சுட்டுத்தள்ள வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு அவர் பதில்அளித்து கூறியதாவது:-

பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து ராணுவத்தி னரையும், குடிமக்களையும் கொன்றுசெல்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நேரம் நரேந்திரமோடி பிரதமராக இருந்து இருந்தால், இந்தியசொல்படி பாகிஸ்தான் நடந்திருக்கும். ஆனால் நமது பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மீண்டும் இதுபோன்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டே தான் இருந்தாகவேண்டும்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் அதிகமானோர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகதெரியும். இனி பேச்சுவார்த்தைக்கு இங்கு என்னஇருக்கிறது. ஒருநாட்டின் பிரதமர் நடந்துகொள்ள வேண்டியபடி நம்பிரதமர் நடந்து கொள்ளவில்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து சிலவற்றை மன்மோகன்சிங் கற்றுக்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்துகொண்டு அவர் பாகிஸ்தானை தாக்கினார். தீவிரவாதி ஒசாமாபின்லேடனை சுட்டுக் கொன்றார். இன்று சிரியாவை மிரட்டும்வல்லமையை பெற்றுள்ளார்.

அது போன்று பிரதமர், ஜமாத் உத்தாவா தலைவர் ஹபீஸ் சயீத்தையும், தாதா தாவூத் இப்ராஹிமையும் பாகிஸ்தானுக்குள்ளே சுட்டுத்தள்ளவேண்டும் என்று அவர் பதிலளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...