மொரார்ஜி தேசாய் இந்திய அரசியலின் அரிதான தலைவர்

 மொரார்ஜி தேசாய் வரலாற்றில் சிலநாயகர்கள் அவ்வளவாக நினைவு கூரப்படுவது இல்லை. அத்தகு தலைவர் மொரார்ஜி தேசாய்.

'எந்தசொத்தையும் என் அப்பா எனக்கு சேர்த்துவைக்கவில்லை; நேரான

வாழ்க்கையையும், அறம்சார்ந்த செயல்பாட்டையும் மட்டுமே எனக்குள் விதைத்துவிட்டு போயிருக்கிறார்' என்கிற அளவுக்கு எளிமையான குடும்பத்தில் குஜாரத்தில்பிறந்தார்.

சிவில்சர்வீசஸ் தேர்வில் தேறி ஆங்கிலேய அரசில் பணியாற்றி கொண்டிருந்தவர், காந்தியடிகளின் அழைப்பை ஏற்று உப்புசத்யாகிரகத்தில் பங்குகொள்ள, தன்பதவியை துறந்து வந்தார்.

எண்ணற்ற விடுதலை போராட்டங்களில் பங்கு கொண்ட மனிதர், மும்பை மாகாணத்தின் முதல்வராக உயர்ந்தார். பின், நிதிஅமைச்சராக, துணைப்பிரதமராக காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த இவர், இந்திரா கட்சியை உடைத்ததும் ஸ்தாபனகாங்கிரசில் இணைந்தார். பின்னர் எமெர்ஜென்சியால் நாடு ஜனநாயகம் இழந்தபொழுது ஜெ.பி.யின் பின் அணிவகுத்து ஜனதாகட்சியில் அங்கம் வகித்தார்.

தேர்தலில் வென்றதும் முதல்காங்கிரஸ் அல்லாத பிரதமர் என பெருமைபெற்றார். எல்லா உணவகங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏழைமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு ஒவ்வொரு நாளைக்கும் போடவேண்டும் என அவர் கொண்டு வந்த திட்டமே ஜனதா சாப்பாடு என புகழ்பெற்றது. அதை பின்பற்றினால் மட்டுமே உணவகங்களுக்கு அனுமதிதரப்பட்டது.

எம்ஆர்பி.யை பொருட்களின் மீதும் குறிக்கும் முறையும் இவர்காலத்தில் வந்ததே. இவரின் வாழ்க்கை நேர்மையால் மின்னிய தன்மைகொண்டது. பம்பாய் மாகாண அமைச்சராக இருக்கும் பொழுது மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த முதல் தர மாணவியான இவர் மகள் ஒருதாளில் தவறவே தேசாயிடம் மறுதிருத்தலுக்கு விண்ணப்பிக்கிறேன் என கேட்க, இவர் ''நான் இந்தமாகாண அமைச்சர். நீ நேரியவழியில் தேறினாலும் நான்தான் அவ்வாறு செய்யுமாறு செய்தேன் என ஊர்ஏசும். வேண்டாம்'' என்று சொல்ல, மகள் தற்கொலை செய்துகொண்டார்.

அதைவிட நம்பவே முடியாத ஒருநிகழ்வும் நடந்தது. அரசின் மிகமுக்கிய பொறுப்பில் இருந்த இவர், வாடகை கட்டமுடியாமல் அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேற்றபட்டார். எந்த அதிகார துஷ்பிரயோகமும் செய்யாமல் வெளியேறினார். மருமகள் அந்த அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்திரா காந்தியோடு ஏகத்துக்கும் முரண் பட்டாலும் அவரின் மகன் சஞ்சய்காந்தி இறந்த பொழுது அவரை தேற்றபோன முதல் சில ஜீவன்களில் இவரும் ஒருவர்.

பாரதரத்னா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதான நிஸான் இபாகிஸ்தானி ஆகிய இரு விருதுகளையும் பெற்றவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...