குடியரசு தலைவரிடம் இருந்து மத்தியஅரசு பாடம் கற்க வேண்டும்

 குடியரசு தலைவரிடம் இருந்து மத்தியஅரசு பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர்பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவிய போதிலும் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபட்டது சரியல்ல.

அனுபவத்தில் பாடம்கற்க இந்தியா தவறிவிட்டது. நாட்டு மக்களுக்காக பேசியுள்ள குடியரசுத் தலைவரிடம் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதக் கட்டமைப்புகளை பாகிஸ்தான் தகர்க்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
“”எல்லையில் என்ன நடந்தாலும் பேச்சுவார்த்தைதொடரும்” என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான்பஷீர் கூறியது குறித்துக் கேட்கிறீர்கள். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதவுமும் ஒரேபாதையில் செல்ல முடியாது. இந்தப் பாடத்தை மத்திய அரசு இன்னும் கற்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் கேரன்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதல் திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருந்த போதுதான் இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்கள் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவசரச்சட்டம் வாபஸ்: தண்டனைபெறும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான அவசரச் சட்டத்தை அரசு திரும்பப்பெற்றதற்கு குடியரசுத் தலைவர் தான் காரணம். மத்திய அமைச்சர்கள் சிலரை அழைத்து இந்த அவசரச்சட்டம் குறித்து அவர் சிலகேள்விகளைக் கேட்டார் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் தெரியும்.

இந்தவிவகாரத்தில் ராகுல்காந்தி தலையிட்டு கருத்து கூறியதால் அவசரச்சட்டம் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்படுவது தவறு. நாட்டின் மனநிலையே இச்சட்டம் வாபஸ்பெறப்பட காரணமாக இருந்துள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...