முன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசிய சிதம்பரம் புகார்

 முன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசியதற்காக மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் பாஜக.வினர் செவ்வாய்க் கிழமை புகார் அளித்தனர்.

திருச்சி மாநகரக்காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவிடம் பாஜக. மாநிலச் செயலர் எம். சுப்பிரமணியம், கோட்ட பொறுப்பாளர் இல. கண்ணன் உள்ளிட்டநிர்வாகிகள் அளித்த புகார்மனுவில் தெரிவித்திருப்பது:

திருச்சி புத்தூரில் அக்டோபர் 26ம் தேதி நடைபெற்ற மத்தியஅரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனதுபேச்சில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை "அமரர்' என்று குறிப்பிட்டு பேசினார்.

இந்தபேச்சு பாஜக. தொண்டர்களின் மனதை புண்படுத்தி விட்டது. நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்து தற்போது நிதி அமைச்சராக பொறுப்புவகிக்கும் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகக் கூறிபேசுகிறார்.

இப்பேச்சுக்கு எந்த வித வருத்தமோ, மறுப்போ தெரிவிக்காமல் இருப்பது அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. வாஜ்பாயை இழிவுப் படுத்தும் வகையில் பேசிய சிதம்பரம்மீது வழக்குப்பதிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...