தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை

 ஐந்துமாநில சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து வரும் 11ம்தேதி முதல் டிசம்பர் 4ம்தேதி வரை கருத்துக்கணிப்புகள் நடத்தி அவற்றின் முடிவை வெளியிடக் கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் இன்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

.
டெல்லி, ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்துமாநிலங்களுக்கு சட்ட சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் ஏற்காடு சட்ட சபை தொகுதிக்கு டிசம்பர் 4ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

சட்ட சபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால், வாக்காளர்கள் அதுகுறித்த தங்கள் எண்ணத்தை பதிவுசெய்ய தற்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் புதியவசதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்துமாநில சட்ட சபை தேர்தலில், நான்குமாநிலத்தை பிஜேபி கைப்பற்றும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதனால் காங்கிரஸ்கட்சிக்கு கலக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கருத்து கணிப்புகளுக்கு தடைவிதிக்க கோரி காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.

இந்நிலையில் தலைமைதேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவித்துள்ளது. வருகிறது 11ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4ம் தேதிவரை கருத்துக் கணிப்புகள் நடத்தவோ, அவற்றின் முடிவுகளை தொலை காட்சிகளோ, பத்திரிகைகளோ வெளியிடக் கூடாது என்று தலைமை தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...