மக்களின் வாழ்க்கை நிலை குறித்து காங்கிரசுக்கு சிறிதும் கவலையில்லை மன்னராட்சியை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் கட்சி காங்கிரஸ். அதனால் தான் டெல்லி மக்களைவிட மகன் சந்தீப்தீட்சித் மீதுதான் ஷீலா தீட்சித்துக்கு அதிக அக்கறை என நிதின்கட்கரி குற்றம் சுமத்தியுள்ளார்
பா.ஜ.க முன்னாள் தலைவரும் டெல்லிமாநில தேர்தல் பொறுப்பாளருமான நிதின் கட்கரி, மெஹ்ருலியில் நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் பேசியதாவது: நாட்டை 60 ஆண்டுகளுக்குமேல் ஆண்டுள்ள காங்கிரசுக்கு மக்களின் வாழ்க்கைநிலை குறித்து தெரியாது. அதுபற்றி அந்தகட்சிக்கு கவலை இல்லை. அதேபோல், நாட்டில் நடந்துள்ள எல்லா ஊழல்களுக்கும் காங்கிரஸ் தான் காரணம். காற்றில்- 2ஜி , நிலத்தில்-காமன்வெல்த் விளையாட்டு போட்டி, பூமிக்கடியில் – நிலக்கரி சுரங்கம் என எல்லாவற்றிலும் ஊழல்செய்து சாதனை படைத்துள்ள ஒரேகட்சி காங்கிரஸ்தான்.
மன்னராட்சியை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் கட்சி காங்கிரஸ். அதனால் தான் டெல்லி மக்களைவிட மகன் சந்தீப்தீட்சித் மீதுதான் ஷீலா தீட்சித்துக்கு அதிக அக்கறை. அவரது தலைவர் சோனியாவுக்கோ ராகுல் நலனில் தான் அக்கறை. ராகுல்காந்தியை பிரதமராக்குவது தான் காங்கிரசுக்கு இப்போதுள்ள ஒரேபணி. அந்த பதவியைவகிக்க ராகுலுக்கு எந்ததகுதி உள்ளது? எந்த தகுதியை அவர் வளர்த்துகொண்டுள்ளார்? ராகுல் பிரசாரம்செய்த இடங்களில் காங்கிரஸ் தோற்றது தான் அவரது ஒரேசாதனை. மெஹ்ருலியில் ராகுல்காந்தி பிரசாரம் செய்தால், பாஜக. வேட்பாளர் பர்வேஷ் சாகிப்சிங்கின் வெற்றி உறுதியாகிவிடும்.
பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், பிறப்பிக்கப்படும் முதல் உத்தரவு மின்கட்டணத்தை 30 சதவீதம் குறைப்பதுதான். ஒவ்வொரு வீடுகளில் சூரியமின்சக்தி கருவி பொருத்தப்படும். அதன் மூலம் வீடுகள்தோறும் மின் உற்பத்தி செய்யமுடியும். இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.