இனப் படுகொலையில், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப்பொறுப்பு உண்டு

 இலங்கை இனப் படுகொலையில், பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப்பொறுப்பு உண்டு இனப் படுகொலைக்கு ராஜபக்சே 100 சதவீதபொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 50 சதவீத தார்மீகபொறுப்பு உண்டு.என்று தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , இலங்கை தமிழர் விவகாரத்தில் பா.ஜ.க மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம்சுமத்தி உள்ளார். இது காலம்கடந்து ஏற்பட்ட ஞானோதயம்.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம்வழங்கினால் அது எப்படி இந்தியாவுக்கு எதிராகதிரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்குகொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீதுபாயும் என்பதை பாஜக. உணர்ந்து இருந்தது.

எனவேதான் இலங்கை அரசு ஆயுதம்கேட்டபோது தர மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுதபயிற்சிக்கும் தார்மீக ஆதரவு தரமறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டுமக்களுக்கு தெரியும்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு வெறும்நாடகம். இதனால் பயன்பெறபோவது ராஜபக்சே. இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால் காமன்வெல்த்மாநாட்டை எதிர்த்தது பா.ஜ.க.

இங்கிலாந்து பிரதமர் கேமரூனின் அடிப்படைதைரியம் கூட மன்மோகன்சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்தபிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு ராஜபக்சே 100 சதவீதபொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 50 சதவீத தார்மீகபொறுப்பு உண்டு.

மத்திய அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்புண்டு என்பதை அவர் உணர வேண்டும். காலம்கடந்து உண்மைகளை மறைக்க குற்றம் சுமத்துவதை தவிர்க்கவேண்டும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...