நிலக்கரி சுரங்க உரிம முறைகேட்டில் சோனியாகாந்திக்கும் பங்கு

 நிலக்கரி சுரங்க உரிமம் முறைகேட்டில் காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கும் பங்கு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லியில் பரபரப்புகுற்றம் சாட்டியுள்ளார். நிலக்கரிசுரங்க உரிமங்கள் ஒதுக்கப்பட்டபோது அத்துறையை கவனித்துவந்த பிரதமர் மன்மோகன்சிங் சோனியாவின் கட்டளைபடியே முறைகேடுகளை நடத்தியதாக அத்வானி குற்றம்சாற்றியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியஅரசில் நேர்மையற்ற தன்மை நிலவிவருகிறது. காமன்வெல்ட் விளையாட்டு போட்டிகளில் தொடங்கிய அடுத்தடுத்து நடைபெற்றஊழல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்த போது ஆளும் ஐ.மு.,கூட்டணி தலைமைவகிக்கும் காங்கிரஸ்கட்சி ஊழலுக்கான பழிகளை எல்லாம் கூட்டணிகட்சிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முயற்சித்தது.

இப்போது நிலக்கரி சுரங்கஊழல் விவகாரத்தில் பிரதமரே நேரடியாக மாட்டிக் கொண்டார். இந்த ஊழலில் கூட்டணிகட்சிகளின் மீது யாரும் பழிபோடவே முடியாது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுகூட எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போது எல்லாம் குற்றம் சுமத்தப் பட்டவர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை ஏடுத்துள்ளோம்.

மத்திய அரசை தற்போது இரண்டுபேர் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவரின் ஒப்புதலைபெறாமல் பிரதமர் மன்மோகன்சிங் எந்த முடிவையும் எடுப்பதில்லை. எனவே, நிலக்கரிசுரங்க ஊழலுக்கு பிரதமருடன் சேர்ந்து சோனியா காந்தியும் பொறுப்பேற்கவேண்டும்.

டெல்லி சட்ட சபை தேர்தலில் பாஜக. வின் 14 ஆண்டுகால வனவாசம் முடிவுக்குவரும் என்று அத்வானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மீண்டும் -ஆட்சியைபிடிக்க நினைக்கும் காங்கிரஸின் கனவை டெல்லிமக்கள் தகர்த்து விடுவார்கள் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...