தெலங்கானா மசோதாவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம்

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் போது அதற்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என பாஜ தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவை பிரித்து தெலங்கானா புதியமாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானா மசோதா உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குபின்னர் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து ஆந்திர சட்ட சபையின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று சட்ட சபையில் தெலங்கானா மசோதா குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா தாக்கல்செய்யப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

தெலங்கானா மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பிஜு ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சி தலைவர்களை சந்தித்து தனது நிலைபாட்டுக்கு ஆதரவுகேட்டார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் அண்மையில் சந்தித்தார். அப்போது பாஜக தரப்பில் உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தெலங்கானா மசோதாவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என பாஜ செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:மக்களவை தேர்தலுக்கு முன்பாக தெலங்கானாமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தெலங்கானா விவகாரத்தை காங்கிரஸ் வாக்குவாங்கி அரசியல் ஆக்கிவிட்டது. சீமாந்திரா மக்களின் ஒப்புதலைபெறாத, அவர்களது நலனை பாதுகாக்காத தெலங்கானா மசோதாவுக்கு பாஜக ஆதரவு அளிக்காது. மாநிலங்களை எப்படிபிரிக்க வேண்டும் என்பதை வாஜ்பாய் செய்துகாட்டினார். எப்படி பிரிக்கக் கூடாது என்பதை காங்கிரஸ் செய்துவருகிறது. இவ்வாறு ஜாவேத்கர் கூறினார். இதேகருத்தை டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும் தெரிவித்தார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், தெலங்கானா மக்களும், சீமாந்திரா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...