இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் தருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தெரிவித்தனர். ஓரினச் சேர்க்கை இயற்கைக்குமாறானது எனவும் இந்திய பாரம்பரியத்திற்கு எதிரானது எனவும் பாஜக கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஓரினச் சேர்க்கை மற்றும் 377வது சட்டப்பிரிவு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் மென்மையான நிலைப்பாட்டை யோகாகுரு பாபா ராம்தேவ் ஆட்சேபித்துள்ளார்.
“இந்தநிலைப்பாடு, காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதுபோன்றும், அதனால்தான் அவர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு அளிப்பதுபோன்றும் தோன்றுகிறது” என்றும் ராம் தேவ் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மிகட்சியின் சின்னமான துடைப்பத்தை பற்றி கிண்டலாகப்பேசிய ராம்தேவ், பாராளுமன்றத்திற்கு இரண்டுமூன்று துப்புரவாளர்கள் தேவை என்றும் கூறினார்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.