இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் தருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தெரிவித்தனர். ஓரினச் சேர்க்கை இயற்கைக்குமாறானது எனவும் இந்திய பாரம்பரியத்திற்கு எதிரானது எனவும் பாஜக கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஓரினச் சேர்க்கை மற்றும் 377வது சட்டப்பிரிவு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் மென்மையான நிலைப்பாட்டை யோகாகுரு பாபா ராம்தேவ் ஆட்சேபித்துள்ளார்.
“இந்தநிலைப்பாடு, காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதுபோன்றும், அதனால்தான் அவர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு அளிப்பதுபோன்றும் தோன்றுகிறது” என்றும் ராம் தேவ் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மிகட்சியின் சின்னமான துடைப்பத்தை பற்றி கிண்டலாகப்பேசிய ராம்தேவ், பாராளுமன்றத்திற்கு இரண்டுமூன்று துப்புரவாளர்கள் தேவை என்றும் கூறினார்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.