சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவுவிழா வருகிற 12ந்தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் விழாநிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியா குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் நேற்று நடந்தது.
இதில் ஆர்எஸ்எஸ். அமைப்பின் அகிலபாரத தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று காலை ரெயில்மூலம் கன்னியாகுமரி வந்துசேர்ந்தார். அவரை கேந்திர அகில இந்திய தலைவர் பரமேஸ்வரன், கேந்திர துணைதலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானுதாஸ், இணை செயலாளர் கிஷோர், பொருளாளர் மற்றும் நிர்வாக செயலாளர் அனுமந்த ராவ், ஆர்எஸ்எஸ். தென் மாநில பொறுப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
காலை 10.30 மணிக்கு 42 மாவட்டங்களை சேர்ந்த 250 நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைகூட்டம் நடந்தது. இதில் நிறைவுவிழா நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மோகன்பகவத் வருகையை யொட்டி கன்னியாகுமரி ரெயில் நிலையம் மற்றும் விவேகானந்தா கேந்திராவில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கேந்திரத்துக்கு செல்பவர்கள் அனைவரும் பலத்தசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.