நரேந்திரமோடி எதிரான குல்பர்க் சொசைட்டி வழக்கு தள்ளுபடி

 குஜராத் குல்பர்க்சொசைட்டி படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திரமோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியாஜாப்ரி தொடர்ந்த வழக்கை அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்னும் இடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 இஸ்லாமியர்கள் கலவரத்தில் இறந்தனர்.

முதல்வர் நரேந்திரமோடியின் தூண்டுதலின் பேரில்தான் இந்தப்படுகொலை நடந்தது என்று ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடந்து உச்ச நீதிமன்றம் சிபிஐ முன்னாள் இயக்குனர், ஆர்கே.ராகவன் தலைமையிலான சிறப்புவிசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வு குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தது. இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.

ஆனால் அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் ஜாகியா மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடுசெய்தார். முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஜாப்ரிக்கு அனுமதி தந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல்மாதம் ஜாகியா, அகமதாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுமீது அகமதாபாத் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி.ஜே.கனத்ரா விசாரணை நடத்தினார். இருதரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதி கடந்த அக்டோபர் 28ம்தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறியிருந்தார்.

பின்னர் இந்த வழக்கில் டிசம்பர் 26ம் தேதியன்று தீர்ப்புவழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மோடிக்கு எதிரான ஜாகியாஜாப்ரியின் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது. இந்தகலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...