முசாஃபர் நகரில் லஷ்கர்-இ தொய்பா

 பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் தங்களது இயக்கத்துக்கு ஆள்சேர்ப்பதற்காக, உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் கலவரம் நடந்த முசாஃபர் நகரில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தில்லி காவல் துறை பயங்கரவாதிகள் தடுப்புப்பிரிவின் சிறப்பு ஆணையர் எஸ்என். ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை இதுபற்றி கூறியதாவது:

முசாஃபர் நகரில் வசித்துவரும் ஜமீர், லியாகத் ஆகிய இருஇளைஞர்களை தில்லி போலீஸார் அண்மையில் கைதுசெய்தனர். மசூதிகட்டுவதற்கு பணம் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இருவரும் ஆள்கடத்தல், வழிப்பறி ஆகியசெயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவர் உள்ளிட்ட முசாஃபர் நகர்வாசிகள் சிலரிடம், இந்தியாவுக்கு எதிராக நாச வேலையில் ஈடுபட வேண்டும் என்று அடையாளம் தெரியாதநபர்கள் மூளைச்சலவை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தங்களுக்கு ஒத்துழைப்பாக நடந்துகொண்டால் செல்வச்செழிப்புடன் கூடிய வசதிகள் செய்துதரப்படும் என்று ஆசைவார்த்தைகளை சில நபர்கள் கூறியுள்ளதாக ஜமீரும், லியாகத்தும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தில்லி பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டது என்றார்.

இதுபற்றி பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. ஆகையில் இந்தவிவகாரம் குறித்து முழுமையான விசாரணைதேவை” என்றார்.

பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், பாகிஸ்தானின் உதவிபெறும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, எந்த அளவுக்கு உத்தரப்பிரதேசத்தில் வேறூன்றியிருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. இது ஒரு தேசியபிரச்னை. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவோ, கண்டுபிடிக்கப்படவோ இல்லை. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...