நிர்வாகத்தை கவனிப்பதை விடுத்து, வீதிக்குவந்து போராட்டம் நடத்த முயல்வது ஏன்

 அரசு பொறுப்பேற்றபிறகு தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் விதம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வழிக்கு இட்டுச் செல்வதை எடுத்துக் காட்டியுள்ளது. தில்லி தலைமை செயலகத்தில் நிர்வாகத்தை கவனிப்பதை விடுத்து, வீதிக்குவந்து போராட்டம் நடத்த முயல்வது ஏன், என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளதாவது:

சோதனை என்ற பெயரில், தில்லிபிரதேச சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, ஆப்பிரிக்க நாட்டவர்களிடம் நடந்து கொண்ட விதம் சரியல்ல. தலை நகரில் தங்கியுள்ள ஆப்பிரிக்கருக்கு சோம்நாத்பார்தி, தீவிரமான பிரச்னைகளை உருவாக்கியுள்ளார். அவருடைய அணுகு முறை இனவெறி போன்ற செயலாகத் தோன்றகிறது. சிலதினங்களாக ஆம் ஆத்மியின் செயல்பாடுகளே அக்கட்சியை பாதிக்கச் செய்வதாக இருக்கிறது. சிலபோலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம்செய்ய வேண்டும் என்று கோரி தில்லி முதல்வர் அரவிந்த்கேஜரிவால் தர்னா நடத்தத் திட்டமிட்டிருப்பதும் ஒரு சதிதான். தில்லி தலைமைச் செயலகத்தில் இருந்து நிர்வாகத்தை கவனிப்பதை விட, ஆம் ஆத்மிக்கு தர்னா நடத்துவது தான் வசதியாக இருக்கிறது போலும்.

அரசு பொறுப்பேற்றபிறகு தலைமை செயலகத்தில் அக்கட்சி செயல்பட்டு வரும் விதம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வழிக்கு இட்டுச் செல்வதை எடுத்துக் காட்டியுள்ளது. காங்கிரசுடனான வெளிப்படைத் தன்மையில்லாத உறவைத் துண்டிப்பதற்காகத் தான் தர்னாவா? அல்லது அரசை விட்டு வெளியேறி வீதியில் இறங்கிப்போராட ஆம் ஆத்மிகட்சி நினைக்கிறதா? நாடு முழுவதும் உள்ள தனது கட்சித் தொண்டர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் தில்லியில் ஆம் ஆத்மி அரசை அமைத்தது. ஆனால், இதன்செயல்பாடுகள் நாளுக்குநாள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. போராட்டம் நடத்துவது என்பது வேறு, ஒருகட்சியை உருவாக்கி, ஆட்சி நடத்துவது என்பது வேறு என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...