நிர்வாகத்தை கவனிப்பதை விடுத்து, வீதிக்குவந்து போராட்டம் நடத்த முயல்வது ஏன்

 அரசு பொறுப்பேற்றபிறகு தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் விதம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வழிக்கு இட்டுச் செல்வதை எடுத்துக் காட்டியுள்ளது. தில்லி தலைமை செயலகத்தில் நிர்வாகத்தை கவனிப்பதை விடுத்து, வீதிக்குவந்து போராட்டம் நடத்த முயல்வது ஏன், என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளதாவது:

சோதனை என்ற பெயரில், தில்லிபிரதேச சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, ஆப்பிரிக்க நாட்டவர்களிடம் நடந்து கொண்ட விதம் சரியல்ல. தலை நகரில் தங்கியுள்ள ஆப்பிரிக்கருக்கு சோம்நாத்பார்தி, தீவிரமான பிரச்னைகளை உருவாக்கியுள்ளார். அவருடைய அணுகு முறை இனவெறி போன்ற செயலாகத் தோன்றகிறது. சிலதினங்களாக ஆம் ஆத்மியின் செயல்பாடுகளே அக்கட்சியை பாதிக்கச் செய்வதாக இருக்கிறது. சிலபோலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம்செய்ய வேண்டும் என்று கோரி தில்லி முதல்வர் அரவிந்த்கேஜரிவால் தர்னா நடத்தத் திட்டமிட்டிருப்பதும் ஒரு சதிதான். தில்லி தலைமைச் செயலகத்தில் இருந்து நிர்வாகத்தை கவனிப்பதை விட, ஆம் ஆத்மிக்கு தர்னா நடத்துவது தான் வசதியாக இருக்கிறது போலும்.

அரசு பொறுப்பேற்றபிறகு தலைமை செயலகத்தில் அக்கட்சி செயல்பட்டு வரும் விதம், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வழிக்கு இட்டுச் செல்வதை எடுத்துக் காட்டியுள்ளது. காங்கிரசுடனான வெளிப்படைத் தன்மையில்லாத உறவைத் துண்டிப்பதற்காகத் தான் தர்னாவா? அல்லது அரசை விட்டு வெளியேறி வீதியில் இறங்கிப்போராட ஆம் ஆத்மிகட்சி நினைக்கிறதா? நாடு முழுவதும் உள்ள தனது கட்சித் தொண்டர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் தில்லியில் ஆம் ஆத்மி அரசை அமைத்தது. ஆனால், இதன்செயல்பாடுகள் நாளுக்குநாள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. போராட்டம் நடத்துவது என்பது வேறு, ஒருகட்சியை உருவாக்கி, ஆட்சி நடத்துவது என்பது வேறு என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...