வேலியில் இருந்த ஓணானை மடியில்கட்டி கொண்ட நிலைதான் காங்கிரசின் நிலை

 காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி தடுமாறி கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியோ அகராதியாக செயல் படுகிறது. ஆம் ஆத்மி கட்சியிடம் எப்படி நடந்து கொள்வது என்று காங்கிரசுக்கு தெரியவில்லை. வேலியில் இருந்த ஓணானை மடியில்கட்டி கொண்ட கதையாக காங்கிரசின் நிலை மாறிவிட்டது. அதனால், மக்களவைதேர்தலில் பாஜக வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

இதுபற்றி அருண்ஜெட்லி கூறியிருப்பதாவது: அரசியலில் கடந்த சிலநாட்களாக நடந்துவரும் சம்பவங்கள் பா.ஜ.க.,வுக்கு பெரும்சாதகமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகள் பற்றி எதுவும்சொல்ல தேவையில்லை.

கூட்டணியே தடுமாறி கொண்டிருக்கிறது. நம்பிக்கைதரும் வகையில் அந்த கூட்டணியின் செயல்பாடுகள் இல்லை. மீடியாக்களால் தூக்கிவிடப்பட்ட ஆம் ஆத்மிகட்சி, பாஜக.வின் வெற்றிவாய்ப்பை சற்று குறைக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தகட்சியின் அகராகிதனமான செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.டெல்லியில் ஆம் ஆத்மிகட்சி நடத்திய போராட்டம், மக்களின் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அதனால், காங்கிரசின்தோல்வி, ஆம் ஆத்மியின் அகராதிதனம், இல்லாத 3வது அணி ஆகிய அனைத்தும் சேர்ந்து நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சி அமையும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

வரும் மக்களவை தேர்தல், ஜனாதிபதி தேர்தல்போல் நடக்க உள்ளது. மோடியா – ராகுலா என்று நடக்க உள்ள போட்டியில் மோடி மிக எளிதாக வெற்றிபெற்றுவிடுவார். பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்றவெற்றியும். அதற்கு கிடைத்து வந்த மீடியா ஆதரவும் பாஜக.வுக்கு சற்று கலக்கம் ஏற்படுத்தியது உண்மைதான். எனினும், அதன், அகாராதிதனம் வெளியான பின், அந்த கலக்கம் போய்விட்டது. ஒருபோலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக குடியரசு தினகொண்டாட்டத்தை சீரழிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவுசெய்தது பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியிடம் எப்படி நடந்து கொள்வது என்று காங்கிரசுக்கு தெரியவில்லை. வேலியில் இருந்த ஓணானை மடியில்கட்டி கொண்ட கதையாக காங்கிரசின் நிலை மாறிவிட்டது. இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.