தனக்கு வி.ஐ.பி மரியாதை தரவேண்டாம், பாதுகா்ப்பு வேண்டாம் என்று கூறிக்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால், குடியரசுதின விழாவின் போது அந்த வளையத்திற்குள் இருந்தது குறித்து அவர் விளக்கவேண்டும் என பாஜக கூறியுள்ளது.
இது குறித்து பா.ஜ.க.,வைச் சேர்ந்த ராஜீவ் பிரதாப்ரூடி டிவிட்டரில் கூறியிருப்பதாவது . டெல்லியில் நடந்த குடியரசுதின அணி வகுப்பை கெஜ்ரிவால், 12 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் இருக்க, வி.வி.வி.ஐ.பி வளையப்பகுதியில் அமர்ந்து பார்ததுக்கொண்டிருந்ததை பார்த்து நான் அதிர்ந்துபோனேன்… அவரும் என்னைப்போல ஒரு அரசியல்வாதிதான்.
அவருக்குப் பின்னால் 12க்கும் மேற்பட்ட சீருடைஅணிந்த போலீஸார் பாதுகாப்பாக நின்றுள்ளனர். வி.வி.வி.ஐ.பி பகுதியில் அமர் அமர்ந்திருக்கிறார்… ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவாலைக் காக்க இவ்வளவு பாதுகாப்பா… தனக்கு விஐபிஅந்தஸ்து தேவையில்லை, பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவருகிறார் கெஜ்ரிவால். அப்படியானால் இதற்குப்பெயர் என்ன.. இதுகுறித்து அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரூடி.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.