மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி பிளவை உருவாக்கும் விஷவிதைகளை காங்கிரஸ் கட்சி தான் விதைத்துவருகிறது ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாசத்தின் விதைகளை பா.ஜ.க விதைத்தது என பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சனிக்கிழமை மோடி பங்கேற்று பேசியதாவது:
“நாங்கள் தேநீர் விற்பனையை நாடுமுழுவதும் தொடங்கியுள்ளோம். ஆனால் நீங்கள் (காங்கிரஸ்) நாட்டையை முழுவதுமாக விற்பனை செய்து விட்டீர்கள். வாக்குவங்கிக்காக காங்கிரஸ் கட்சி மக்களிடையே வெறுப்புணர்வு, மதத்துவேஷம், வறுமை ஆகியவற்றை அதிகரிக்கவைத்துள்ளது.
வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கரையும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகண்டையும், பிகார்மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்டையும் பிரிக்க நடவடிக்கை எடுத்தார். புதியமாநிலங்கள் உருவாக்கப்பட்டதை இரண்டுபகுதி மக்களும் இனிப்புகளைக் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஆனால், தற்போது ஆந்திரமாநிலத்தில் இருந்து தெலங்கானாவை பிரிக்கும் நடவடிக்கையில் கடும்குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தல் ஆதாயம்கருதி, சீமாந்தரப் பகுதிமக்களை அதிருப்தியில் ஆழ்த்திவிட்டு, அவர்களை தற்போது தெலங்கானா மக்களுக்கு எதிரானவர்களாகவும் காங்கிரஸ்கட்சி மாற்றியுள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சி மக்களிடையே விதைத்துவரும் விஷவிதையாகும். ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாசத்தின் விதைகளை பா.ஜ.க விதைத்தது’ என்றார் மோடி.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.