பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும் , அதை மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், அந்த மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வியாழக் கிழமை ரயில்மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் ரயில்சேவை பாதிக்கப்பட்டது.
பாட்னா நகரின் சசிவாலா ரயில்நிறுத்தத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் மற்றும் மாநில தலைவர் மங்கல் பாண்டே உள்பட கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், “”பின் தங்கிய , ஏழ்மை நிலையிலுள்ள மாநிலமான பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டிவருகிறது. மாநில வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்புநிதி ஒதுக்க தவறிவிட்டது. பா.ஜ.க ஆட்சிக்குவந்தால், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும், சிறப்புநிதி ஒதுக்குவதாகவும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்” என்றார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.