முதல் கோணல், முற்றும் கோணல்

 சிலர், எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நிலைமை கடினமாகிவிட்டால் அவ்வளவுதான் மிகவும் உடைந்துபோய் விடுவார்கள். ஐ.மு.கூட்டணியும் ராகுல் காந்தியின் கதையும் அப்படித்தான் போலும். நடக்கவிருப்பதை எதிர்பார்த்து மூத்த தலைவர்கள் கூட மூழ்கும் கப்பலை கழட்டிவிட்டுவிட முடிவெடுத்து விட்டார்கள். சிலர் போட்டியிட மறுக்கிறார்கள். மற்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் போட்டியிடவில்லையாம்.

நடக்கவிருப்பதை எதிர்பார்த்தோ என்னவோ ராஹுல் கூட தன் கட்சியின் ஒழுக்கம் பற்றி பேச முடிவெடுத்து விட்டார். கருத்துக்கணிப்புகள் வெறும் ஜோக் என்றும், 2009ல் பெற்றதைவிட அதிக இடங்களை கட்சி பெறும் என்கிறார். காங்கிரசாரின் மூழ்கும் நெறிகளை தூக்கி நிறுத்தும் நோக்கில் வேண்டுமானால் இது முற்றிலும் வெளிப்படையான அணுகுமுறை என ஒத்துக்கொள்ளலாம். அதேசமயம் உண்மையிலேயே இதுதான் உண்மையென நம்புவாரானால், அவர் நிஜத்திலிருந்து வேறுபட்டு விடுகிறார்.

தேர்தலுக்காக தயாரித்த அம்சங்கள் அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. அர்த்தமுள்ள யோசனைகளான அதிகாரத்துவம், அமைப்பை ஒழுங்குபடுத்துதல், போன்றவற்றை ஒதுக்கிவிட்டு, நம்பிக்கை இல்லாமல் முயற்சி செய்த அம்சங்கள், வேலைக்காகவில்லை. புரிந்துகொள்ள முடியாத, அரூப முழக்கங்கள் கொண்ட விளம்பர பலகைகள்தான் நாடு முழுக்க வைக்கப்பட்டுள்ளது. அதன் செய்திகள் மங்கலாக தெளிவற்று உள்ளது. மக்களோ விலைவாசி, பொருளாதாரம், ஊழல்களைப்பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களுக்குத் தேவை முடிவெடுக்கும் ஆளுமைமிக்க தலைமைதான். இவ்வகையில் காங்கிரசும் ஐ.மு.கூட்டணியும் மேற்கண்ட அம்சங்களில் தோற்றுவிட்டார்கள். எதிர்தரப்பினரின் திட்டங்களுக்கு பதில் கொடுப்பதில்தான் சரியாக இருக்கிறார்கள்.

காங்கிரசால் சுமார் பத்தாண்டுகளாக செல்லம் கொஞ்சப்பட்ட சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் இந்த தேர்தல் வேளையில் அவர்களிடமிருந்து விலகி நிற்க முடிவெடுத்துள்ளார்கள். தி.மு.க., திரிணாமூல் மற்றும் LIP போன்றோரும் கழட்டிவிட்டுவிட்டனர். புது கூட்டணிகளும் சேருவது போல் இல்லை. தமிழகத்திலிருந்தும் ஆந்திரத்திலிருந்தும் தான் சென்ற தேர்தலில் அதிக இடங்களை ஐ.மு.கூட்டணி கொத்தாக அள்ளியது. ஒற்றை இலக்க வாக்கு சதவீதத்துடன் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆந்திராவில் தெலுங்கானா விஷயத்தை நம்பிக்கை அடிப்படையில் அணுகாமல், வாக்கு வங்கி வியூகமாக விளையாடியது. சீமாந்த்ராவில் வேட்பாளர்கள் கடமைக்கு போட்டியிடுகிறார்கள். தெலங்கானாவிலும் TRS முதுகில் குத்திவிட்டது.

தெலங்கானாவில் பாஜகவிற்கு, தான் முன்பு ஒப்புக்கொண்ட தீர்வை நிறைவேற்றுவதாக பிரசாரம் செய்யும் வாய்ப்பிருந்தது. ஆனால் நாங்கள் அதை செய்ய விரும்பாமல் நேரடியாக எதிர்த்து விளையாடும் முறையை தேர்வு செய்தோம். தெலங்கானா மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய நாங்கள், சீமாந்த்ராவிற்கு கூடுதல் பொருளாதார பலத்தையும் பெற்றுத்தந்தோம். நெஞ்சுயர்த்தி, தலைகுனியாமல் அந்த இரு பிராந்தியங்களுக்கும் நாங்கள் செல்லலாம். மக்களிடம் மட்டுமில்லாமல் சிறு பிராந்திய கட்சிகளிடமும் நன்மதிப்பை சம்பாதித்து உள்ளோம். தமிழகத்திலும் ஆந்திரத்திலும் எங்களுக்கு நல்ல கூட்டணி அமையும் வாய்ப்பிருக்கிறது.

காங்கிரசுக்கோ தலைமை கூட ஏற்புடையதாக இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேவையான வசீகரமும் கவர்ந்திழுக்கும்  சக்தியும் இல்லை. கடைசி நாளில் கூட, சரியான தேர்தல் வாக்குறுதியோ, தலைமையோ இல்லாமல் பொருந்தாக் கூட்டணியுடன் தேர்தல்களை சந்திக்கக்கூடும்.

முதல் கோணல், முற்றும் கோணல்..

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...