மத்தியில் பி.ஜே.பி தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும்

 மத்தியில் பி.ஜே.பி தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பி.ஜே.பி.,யின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்..
.
சென்னையில் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது; வரும் மக்களவை தேர்தலில் பாஜக 300

தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். ஜஸ்வந்த்சிங், அத்வானி உள்பட மூத்த தலைவர்கள் யாரையும் பா.ஜ.க புறக்கணிக்கவில்லை. மூத்த தலைவர்கள் அனைவருக்குமே பா.ஜ.க உரிய மரியாதையை அளித்துவருகிறது.

கூட்டணி கட்சிகளின் கொள்கைகளை பா.ஜ.க அப்படியே ஏற்றுக் கொள்ளாது. கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் செயல்படுவோம். இந்தியளவில் மோடிக்கும் பாஜக.,வுக்கும் செல்வாக்கு பெருகிவருகிறது. மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து நாட்டைசீரழித்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அகற்றவேண்டும் என்ற உணர்வும் மக்களிடையே பெருகிவருகிறது. அதனால் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்.

யாருடைய ஆதரவையும் கேட்கமாட்டோம். ஆதரவு அளித்தால் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வோம். தமிழ்நாட்டிலும் குறிப்பாக தென்மாநிலங்கள் முழுவதுமே பாஜக.,வுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இங்கும் அதிக இடங்களில் வெற்றிபெறுவோம்.

பிஜேபி ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர்கள்பிரச்சனை, இலங்கை தமிழர்கள் பிரச்சனை ஆகியவற்றுக்கு உரிய தீர்வுகாண்போம்.இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்ட 13 அம்சதிட்டத்தை அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் அரசோ அல்லது அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க.,வோ முயற்சி செய்யவில்லை.

பிஜேபி மத்தியில் ஆட்சி அமைக்கும்போது இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஐக்கிய இந்தியா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.ராஜ்நாத்சிங்கை மு.க.அழகிரி சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...