ஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது; அப்துல் கலாம்

ஊழல் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புற்று நோயை போன்று வேகமாக பரவி வருகிறது. கதிரியக்க சிகிச்சை தந்து புற்று நோயை அளிப்பது போன்று , ஊழலை ஒழிக்க, அரசியல், நீதித் துறை மற்றும் அரசுத்துறைகளுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டியது அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

 

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அப்துல் கலாம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது : ஊழல் நடவடிக்கைகள் இந்தியாவில் மிகப பெரிய பிரச்னையாக_உருவெடுத்துள்ளது. அரசுத் துறைம அரசியல் மற்றும் நீதி துறைகளில் இந்த ஊழல் ஊடுருவி உள்ளது. புற்று நோயை போன்று வேகமாக பரவிவரும் இந்த பிரச்னையை கட்டுபடுத்த , புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சையை அளிப்பது போன்று , இந்த துறைகளுக்கும் சிகிச்சை தர வேண்டும். அதாவது, அரசு துறை, அரசியல் மற்றும் நீதி துறைகளில் ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவது. மிகப்பெரிய சவாலான-விஷயம். இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள் மூலமாக மட்டுமே, இதை செய்ய இயலும் அனைவரும் ஒன்றிணைந்து , இதை சாதிக்க வேண்டும். ஊழல் அதிகரிப்பதன் காரணமாக நாட்டு மக்களுக்கு ஜனநாயத்தின் மீது நம்பிக்கை குறையும். எனவே இதை தடுப்பதற்க்கு சரியான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் நடவடிக்கைகள்-தொடர்ந்தால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை யாராலும் தடுக்க இயலாது . இதனால் பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய இடையூறாக இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...