ஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது; அப்துல் கலாம்

ஊழல் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புற்று நோயை போன்று வேகமாக பரவி வருகிறது. கதிரியக்க சிகிச்சை தந்து புற்று நோயை அளிப்பது போன்று , ஊழலை ஒழிக்க, அரசியல், நீதித் துறை மற்றும் அரசுத்துறைகளுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டியது அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

 

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அப்துல் கலாம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது : ஊழல் நடவடிக்கைகள் இந்தியாவில் மிகப பெரிய பிரச்னையாக_உருவெடுத்துள்ளது. அரசுத் துறைம அரசியல் மற்றும் நீதி துறைகளில் இந்த ஊழல் ஊடுருவி உள்ளது. புற்று நோயை போன்று வேகமாக பரவிவரும் இந்த பிரச்னையை கட்டுபடுத்த , புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சையை அளிப்பது போன்று , இந்த துறைகளுக்கும் சிகிச்சை தர வேண்டும். அதாவது, அரசு துறை, அரசியல் மற்றும் நீதி துறைகளில் ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவது. மிகப்பெரிய சவாலான-விஷயம். இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள் மூலமாக மட்டுமே, இதை செய்ய இயலும் அனைவரும் ஒன்றிணைந்து , இதை சாதிக்க வேண்டும். ஊழல் அதிகரிப்பதன் காரணமாக நாட்டு மக்களுக்கு ஜனநாயத்தின் மீது நம்பிக்கை குறையும். எனவே இதை தடுப்பதற்க்கு சரியான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் நடவடிக்கைகள்-தொடர்ந்தால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை யாராலும் தடுக்க இயலாது . இதனால் பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய இடையூறாக இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...