ஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது; அப்துல் கலாம்

ஊழல் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புற்று நோயை போன்று வேகமாக பரவி வருகிறது. கதிரியக்க சிகிச்சை தந்து புற்று நோயை அளிப்பது போன்று , ஊழலை ஒழிக்க, அரசியல், நீதித் துறை மற்றும் அரசுத்துறைகளுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டியது அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

 

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அப்துல் கலாம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது : ஊழல் நடவடிக்கைகள் இந்தியாவில் மிகப பெரிய பிரச்னையாக_உருவெடுத்துள்ளது. அரசுத் துறைம அரசியல் மற்றும் நீதி துறைகளில் இந்த ஊழல் ஊடுருவி உள்ளது. புற்று நோயை போன்று வேகமாக பரவிவரும் இந்த பிரச்னையை கட்டுபடுத்த , புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சையை அளிப்பது போன்று , இந்த துறைகளுக்கும் சிகிச்சை தர வேண்டும். அதாவது, அரசு துறை, அரசியல் மற்றும் நீதி துறைகளில் ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவது. மிகப்பெரிய சவாலான-விஷயம். இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள் மூலமாக மட்டுமே, இதை செய்ய இயலும் அனைவரும் ஒன்றிணைந்து , இதை சாதிக்க வேண்டும். ஊழல் அதிகரிப்பதன் காரணமாக நாட்டு மக்களுக்கு ஜனநாயத்தின் மீது நம்பிக்கை குறையும். எனவே இதை தடுப்பதற்க்கு சரியான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

ஊழல் நடவடிக்கைகள்-தொடர்ந்தால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை யாராலும் தடுக்க இயலாது . இதனால் பெரிய அளவிலான விளைவுகள் ஏற்படும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய இடையூறாக இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...