குடும்ப வாழ்க்கையை விட தேசத்திற்காக வாழவேண்டும் என்றே மோடி எண்ணினார்

 மிகவும் இளம்வயதில் நரேந்திர மோடிக்கு திருமணம் நடந்ததாகவும், நாட்டிற்காக உழைக்க மனைவியை துறந்ததாகவும் அவரது மூத்தசகோதரர் சோமாபாய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், போதுமான படிப்பறிவு இல்லாத தனது ஏழைபெற்றோர், 18

வயதிற்கு முன்பாகவே மோடிக்கு ஜஷோதா பென் என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்ததாக கூறியுள்ளார். எனினும், திருமணம் ஆன உடனேயே நரேந்திரமோடி வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், அதன் பிறகு அவர் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளாமலேயே வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்ப வாழ்க்கையை விட தேசத்திற்காக வாழவேண்டும் என்பதிலேயே நரேந்திர மோடி தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள சோமாபாய், தேசசேவையே உண்மையான மதம் என்பதில் மோடி உறுதியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியை திருமணம்செய்த ஜஷோதா பென், தனது தந்தைவீட்டில் வசித்து வருவதாகவும், கல்விப் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் சோமாபாய் கூறியுள்ளார். குஜராத்தின் வதோதாரா தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அந்தமனுவில் தான் திருமணமானவர் என்பதை முதன்முறையாக வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...