திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியை பாஜக. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி மே 1ம் தேதி வழிபாடுசெய்கிறார்.
இதற்காக, ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 30ம்தேதி திருப்பதி நகரை வந்தடையும் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தேர்தல்பிரசார கூட்டத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவன்கல்யாணுடன் ஒரேமேடையில் பேசுகிறார்.
சந்திரபாபு நாயுடுவுடன் புதன் கிழமை மாலை திருமலையை வந்தடையும் மோடி, அன்றிரவு திருப்பதி-திருமலை தேவஸ்தான விருந்தினர்மாளிகையில் தங்குகிறார். பின்னர், வியாழக் கிழமை அதிகாலை கோயிலுக்கு சென்று சிறப்புவழிபாடு செய்கிறார்.
மோடியின் வருகையை முன்னிட்டு சித்தூர்மாவட்ட பாஜக.வினரும், தெலுங்குதேசம் கட்சி தொண்டர்களும் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
திருப்பதி நகரம், ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலின் நுழைவுவாயிலான அலிப்ரி, திருமலை மற்றும் கோயிலின் சுற்றுப்புறத்தில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.
சாமி தரிசனத்துக்கு பிறகு திருப்பதியில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள மதனப் பள்ளியில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மோடி பேசுகிறார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.