ஸ்ரீ வெங்கடாஜலபதியை மே 1ம் தேதி வழிபாடு செய்யும் மோடி

 திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியை பாஜக. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி மே 1ம் தேதி வழிபாடுசெய்கிறார்.

இதற்காக, ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 30ம்தேதி திருப்பதி நகரை வந்தடையும் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தேர்தல்பிரசார கூட்டத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவன்கல்யாணுடன் ஒரேமேடையில் பேசுகிறார்.

சந்திரபாபு நாயுடுவுடன் புதன் கிழமை மாலை திருமலையை வந்தடையும் மோடி, அன்றிரவு திருப்பதி-திருமலை தேவஸ்தான விருந்தினர்மாளிகையில் தங்குகிறார். பின்னர், வியாழக் கிழமை அதிகாலை கோயிலுக்கு சென்று சிறப்புவழிபாடு செய்கிறார்.

மோடியின் வருகையை முன்னிட்டு சித்தூர்மாவட்ட பாஜக.வினரும், தெலுங்குதேசம் கட்சி தொண்டர்களும் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

திருப்பதி நகரம், ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலின் நுழைவுவாயிலான அலிப்ரி, திருமலை மற்றும் கோயிலின் சுற்றுப்புறத்தில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.

சாமி தரிசனத்துக்கு பிறகு திருப்பதியில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள மதனப் பள்ளியில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மோடி பேசுகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...