மும்பையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

 மும்பையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தின் 142 -வது ஆண்டு நிறுவன தினம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது.

நாட்டில் ரூ.75 ஆயிரம்கோடி மதிப்பிலான 265 சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் கிடப்பில் கிடந்தன. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச் சூழல் துறை ரெயில்வே போன்ற அமைச்சகங்களிடம் இருந்து அனுமதிகிடைக்காத காரணங்களால் இந்த திட்டங்கள் கிடப்பில்போடப்பட்டு இருந்தன. இதில் ரூ.40 ஆயிரம் கோடி திட்டத்துக்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இந்த பணிகள் அடுத்த 2 ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும்.

கிடப்பில் இருக்கும் மீதமுள்ள ரூ.35 ஆயிரம் கோடிக்கான திட்டங்களுக்கு இன்னும் 8 முதல் 10 நாட்களில் அனுமதி வழங்கப்பட்டுவிடும்.

மும்பையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மும்பையில் உலகதர கப்பல் முனையம், புதிய நீர்மார்க்க திட்டங்கள், 500 அறைகளை கொண்ட மிதக்கும் ஓட்டல், 3 முதல் 4 மிதக்கும் ரெஸ்டாரண்டுகள் போன்ற திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.

மும்பை துறைமுக பொறுப்புகழகத்துக்கு சொந்தமான ரூ.75 ஆயிரம்கோடி மதிப்புள்ள நிலத்தை தனியார் கட்டுமான அதிபர்களிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...