வெங்காயம் விலையில் மொத்தவிற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் பெரியஇடைவெளி இருப்பது குறித்து மாநில அரசுகள்மீது மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது .
பதுக்கலை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு, குஜராத்தவிர இதில் வேறுமாநிலங்கள் தீவிரம்காட்டாதது குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத் மற்றும் தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000 அதிரடிசோதனை நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் முதல் பதுக்கலுக்கு காரணமான 6,223 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
டெல்லியில் வெங்காயம் விலை சில்லறை விற்பனைச்சந்தையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வருகிறது. ஆனால் மொத்தவிற்பனை விலையோ கிலோவுக்கு ரூ.18. இந்த இடைவெளி ஏன் என்று மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து , மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக செயலாளர் கேசவ்தேசிராஜூ கூறியதாவது:-
வெங்காய விற்பனையில் மொத்தவிலைக்கும், சில்லறை விலைக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. அதேநேரம் வெங்காயத்தின் கையிருப்பும் அதிகளவில் இருக்கிறது. வினியோகமும் சீராக உள்ளது. அப்படி இருக்கும் போது ஏன் இந்த இடைவெளிவருகிறது என்பது தெரியவில்லை. இதைவைத்து பார்க்கும்போது, சில்லறையாக விற்பனை செய்வதில் தான் பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எனவே வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்ளப்படும். வெங்காய பதுக்கலை தடுப்பதற்கு உதவியாக வெங்காய விற்பனையாளர்களது இருப்பை கட்டுப்படுத்துவற்கான அனுமதியை அளிக்கும்படி சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், டெல்லி ஆகிய மாநிலங்கள் மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளன. விரைவில் இதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.