விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் கிரிராஜ்கிஷோர் காலமானார்

 விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் கிரிராஜ்கிஷோர் தில்லியில் ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 94.

உ.பி.,யில் கடந்த 1920ம் ஆண்டு பிறந்த கிரிராஜ்கிஷோர், தனது இளம்வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் 1983ம் ஆண்டு விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற முதலாவது பாரதமாதா பேரணி நிகழ்ச்சியின் போது, தன்னை அந்த அமைப்புடன் இணைத்து கொண்டார். விஸ்வஹிந்து அமைப்பின் சர்வதேச பிரிவின் மூத்த துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துவந்தார்.

இது குறித்து விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தில்லி மாநில செய்திதொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் கிரிராஜ் கிஷோர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தில்லி ஆர்கே. புரத்தில் உள்ள விஸ்வஹிந்து பரிஷத் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உயிர் அமைதியான முறையில் பிரிந்தது’ என்றார்.

பிரேசிலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் வலைதளத்தில், கிரிராஜ் கிஷோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...