விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் கிரிராஜ்கிஷோர் காலமானார்

 விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் கிரிராஜ்கிஷோர் தில்லியில் ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 94.

உ.பி.,யில் கடந்த 1920ம் ஆண்டு பிறந்த கிரிராஜ்கிஷோர், தனது இளம்வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் 1983ம் ஆண்டு விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற முதலாவது பாரதமாதா பேரணி நிகழ்ச்சியின் போது, தன்னை அந்த அமைப்புடன் இணைத்து கொண்டார். விஸ்வஹிந்து அமைப்பின் சர்வதேச பிரிவின் மூத்த துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துவந்தார்.

இது குறித்து விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தில்லி மாநில செய்திதொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் கிரிராஜ் கிஷோர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தில்லி ஆர்கே. புரத்தில் உள்ள விஸ்வஹிந்து பரிஷத் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உயிர் அமைதியான முறையில் பிரிந்தது’ என்றார்.

பிரேசிலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் வலைதளத்தில், கிரிராஜ் கிஷோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...