மோகன்பாகவத் செல்லும் பாதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

 ஆர்.எஸ்.எஸ் அகிலபாரத தலைவர் மோகன்பாகவத் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பாதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கேரளத்தை சேர்ந்த நபரை பிடித்தபோலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அகில பாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்திருந்தார். இங்கு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழாவில் பங்கேற்றார். மோகன் பாகவத் வருகையை ஒட்டி மதுரை நகரிலும், புறநகர்பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

குரு பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு மோகன் பாகவத், கார்மூலம் நாகர்கோவில் சென்றதால், மதுரை- விருதுநகர் சாலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.

திருமங்கலம் கள்ளிக்குடி அருகில் கே.வெள்ளாளகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் கையில்பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரிடம் போலீஸார் விசாரித்தனர். அந்த நபர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் கத்தியும், ரூ.4700 பணமும் இருந்தது. கத்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவரை கள்ளிக்குடி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் ஏ.டி.எஸ்.பி. சியாமளாதேவி மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் கேரளமாநிலம் எர்ணாகுளம் எழுவங்கர் ஊரைச்சேர்ந்த அப்துல் கபூர் (40) என்பதும், அவர் எர்ணாகுளத்தில் ஹோட்டலில் பணிபுரிந்ததும், வேலை தேடி தமிழகத்துக்கும் வந்ததும், முதலில் கோவைக்கு சென்ற அவர் அங்கு வேலை கிடைக்காமல் மதுரை வந்ததாகவும், மதுரையிலிருந்து விருதுநகருக்கு சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...