மியான்மர் பயணம் வெற்றி

 மியான்மர் நாட்டில் மேற்கொண்ட 4 நாள் அரசு முறைப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் நடைபெற்ற ஆசியான்மாநாடு, ஆசியான் பிராந்திய அமைப்புக்கூட்டம் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சிமாநாடு ஆகியவற்றில் பங்கேற்று விட்டு இந்தியா திரும்புவதற்கு முன்னர் அந்நாட்டுத் தலைநகர் நேப்பிடாவில் செய்தி யாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: மாநாட்டு நிகழ்ச்சிகள், ஆசியான் உறுப்பினர் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளின் போது இந்தியாவின் நிலைப்பாடுகளை உறுதியான முறையில் எடுத்துரைத்தேன். தென் சீனக்கடல் பிராந்தியத்தில் சுமுகமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் இந்த 3 அமைப்புகளின் உறுப்பு நாடுகள் மத்தியில் இந்தியா மீதானமதிப்பு உயர்ந்துள்ளது.

மோடியின் அரசு செயல்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் தொழில்தொடங்கவும், முதலீடுசெய்யவும் ஆர்வமாக இருப்பதாகவும் 3 அமைப்புகளின் உறுப்பு நாட்டுப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மியான்மர் அதிபர் யூ தெய்ன்செய்ன், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் யூ உன்னா மாங் உடனான பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பிரச்னையை ஏற்படுத்தி வரும் சில தீவிரவாத அமைப்புகள் மியான்மரை மையமாக கொண்டு இயங்குவதைச் சுட்டிக்காட்டி, இதனால் இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்’ என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...