இனி ஆட்சியும், கட்சியும் ஒரே திசையில் செல்லும்

 தனக்கிருக்கும் மக்களின் ஆதரவு தளத்தை இழக்க எந்த ஒரு அரசியல் வாதியும் விரும்ப மாட்டார். இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் விதிவிளக்கல்ல. தன் மீது நம்பிக்கை கொண்ட கோடான கோடி மக்களின் குறிப்பாக இளைஙர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த அமித் ஷாவை பாஜக.,வின் தேசிய தலைவராக ஆக்கி அடித்தளம் அமைத்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை மட்டும் அல்ல தனிப் பெரும்பன்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. இது காங்கிரசின் மீதான அதிருப்தியால் மட்டும் அல்ல நரேந்திர மோடியின் மீது மக்கள் கொண்ட அதீத நம்பிக்கையின் காரணமாகவே சாத்தியமானது. இருப்பினும் அறுபது வருட காங்கிரஸ் அரசின் அவலங்களை எல்லாம் கண்டும் காணாமல் மேம்போக்காக இருந்தவர்கள். காங்கிரஸ்சுடன் கூட்டணி என்ற வடிவத்தில் இணைந்து அட்டூழியங்கள் பல புரிந்தவர்கள் எல்லாம் அறுபது நாள் மோடி அரசை விமர்சிக்கிறார்கள்.

மோடி அறுபது நாளில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் ஒரு மந்திரவாதியும் அல்ல அதே நேரத்தில் அவர் ஒரு சிறந்த நிர்வாகியும் கூட என்பதை வாக்களித்த அனைவரும் அறிவர். இன்று இந்தியாவின் மீதான உலகின் பார்வை மாறியுள்ளது அண்டை நாடுகளாக இருந்த போதிலும் இந்தியாவை அந்நியனாகவே பார்த்த எல்லை நாடுகள் எல்லாம் இன்று இந்தியாவின் மீதான தங்கள் பார்வையை மாற்றியுள்ளது.

ஆட்சி மாறினாலும் அதிகார வர்கத்தின் அவல நிர்வாகமும், ஊழலும் மாறுவதே இல்லை. ஒரு சிறந்த அரசுக்கு அடித்தளமாக இருக்கும் அதிகார வர்க்கத்தினை சீர்திருத்தும் விதமாக 19 அம்ச திட்டங்களை வெளியிட்டுள்ளார். நிர்வாக முடிவு தொடர்பான கோப்புகள் மூன்று மேஜைகளை தாண்டக்கூடாது. உறவினர்கள் யாரையும் உதவியாளர்களாக நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அமைச்சர்களுக்கு விதித்துள்ளார்.

இந்திய விவசாயத்துக்கு அடித்தளமாக இருக்க போகும் நதிகள் இணைப்புக்கும் , இந்திய பொருளாதாரத்துக்கு அடித்தளமாக இருக்க போகும் தங்க நாற்கரம் , வைர நாற்கரம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் 60 நாட்களுக்குள் உயிர் தந்துள்ளார். அதாவது 60 வது வருட காங்கிரஸ் அரசால் வலுவிழந்துள்ள தேசத்தின் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் 60 பது நாட்களுக்குள் எடுத்துள்ளார்.

இருப்பினும் மக்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ள ஆட்சியில் மட்டும் அல்ல கட்சியிலும் சிறந்த நிர்வாகம் தேவை, மேலும் வரவிருக்கும் மகாராஷ்டிரா , ஜம்மு காஷ்மீர் , ஜாட்கன்ட், ஹரியாணா, டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றி தோல்வி மத்திய அரசின்மீது மாபெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். எனவே ஆட்சியும், கட்சியும் ஒரே திசையில் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். அமித்ஷா போன்ற மாபெரும் சிறந்த நிர்வாகிகளால் இது நிச்சயம் சாத்தியமே.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...