ராமர் பாலத்தை உடைக்கும்பேச்சுக்கே இடமில்லை

 ராமர் பாலத்தை உடைக்கும்பேச்சுக்கே இடமில்லை , அதேநேரம் சேது சமுத்திர திட்டத்தை நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள நான்கு வழிகளில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை செயல்படுத்தும் திட்டம் தான் சேது சமுத்திர திட்டம். இந்ததிட்டம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது ராமர் பாலத்தை எக்காரணம் கொண்டும் உடைக்ககூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் கேள்விநேரத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறுகையில்,

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தும் போது ராமர்பாலத்தை உடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேநேரம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிபுணர் குழு நான்கு வழிகளை பரிந்துரைத்திருப்பதாகவும் அவற்றில் ஒருவழியில் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நிதின் கட்காரி தெரிவித்தார்.

இதனிடையே நீதிபதிகள் நியமனமசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இந்தமசோதா மக்களவையில் நிறைவேறியது. இதனிடையே நேற்று பாராளுமன்ற கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...