ராமர் பாலத்தை உடைக்கும்பேச்சுக்கே இடமில்லை , அதேநேரம் சேது சமுத்திர திட்டத்தை நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள நான்கு வழிகளில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை செயல்படுத்தும் திட்டம் தான் சேது சமுத்திர திட்டம். இந்ததிட்டம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது ராமர் பாலத்தை எக்காரணம் கொண்டும் உடைக்ககூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் கேள்விநேரத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறுகையில்,
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தும் போது ராமர்பாலத்தை உடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேநேரம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிபுணர் குழு நான்கு வழிகளை பரிந்துரைத்திருப்பதாகவும் அவற்றில் ஒருவழியில் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நிதின் கட்காரி தெரிவித்தார்.
இதனிடையே நீதிபதிகள் நியமனமசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இந்தமசோதா மக்களவையில் நிறைவேறியது. இதனிடையே நேற்று பாராளுமன்ற கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.