புதியவரலாறு படைக்க முடியும்

 இந்திய – சீன உறவை வலுப்படுத்தினால், புதியவரலாறு படைக்க முடியும், இந்தியாவும் சீனாவும் பயன்பெற்றால் உலகின் மொத்தமக்கள் தொகையில் 35 சதவீதம் மக்கள் பயன் பெறுகின்றனர் என பிரதமர் நம்பிக்கை .தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செவ்வாய்க் கிழமை சீன பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திரமோடி கூறும் போது, "வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவும் சீனாவும் இணைந்துள்ளன. இருநாடுகளும் இணைந்து மக்களுக்கு சிறந்த எதிர் காலத்தை உருவாக்க முடியும்.

இந்தியா – சீனாவுக்கு இடையேயான உறவு வெகுவாகவளர்ந்துள்ளது. இந்த உறவின் வளர்ச்சி மனித்தன்மையின் வரலாற்றை மாற்றி அமைக்கும். மேலும், இந்த கிரகத்தையே சிறப்பாக மாற்றி அமைக்கும்.

இந்தியாவும் சீனாவும் இணைந்து பலமைல்கல்களை ஒன்றாக கடக்கும் என்று நான் நம்புகிறேன். பலமைல்களை கடப்பதன் மூலம் இருநாடுகள் மட்டுமின்றி ஆசியாவும் மொத்த மக்களினமும் வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையை நோக்கிமுன்னேறும்.

" இந்தியாவும் சீனாவும் பயன்பெற்றால் உலகின் மொத்தமக்கள் தொகையில் 35 சதவீதம் மக்கள் பயன் பெறுகின்றனர். அதேபோல இந்திய – சீனாவின் உறவு வலுப்பட்டால் உலகின் 35 சதவீத மக்கள் நெருக்கமாகிறார்கள். இந்திய – சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்தால் உலகமக்கள் தொகையில் 35 சதவீத மக்கள்தொகையின் வாழ்வாதாரம் தரமான மாற்றத்தை அடையும்.

இருநாடுகளுக்கு இடையேயான உறவின் மூலம் புதியவரலாற்றை உருவாக்கி மனித குலத்திற்கு சிறந்த வருங்காலத்தையும் உருவாக்கமுடியும் என்று நான் நம்புகிறேன்" என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...