சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார்களை இழிவுப்படுத்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கம்

 சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட 9–ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் நாடார்களை இழிவுப்படுத்தும் விதத்தில் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.

இப்பாடப் புத்தகத்தின் 168–ம் பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட சாதி கொடுமைகளும், மோதல்கள் மற்றும் பெண்களின் உடைகள் என்ற தலைப்பிலான பாடம் நாடார்சமுதாய பெண்களை மிக இழிவாகவும், கொச்சைப் படுத்தும் விதமாக வந்த பகுதியினை நீக்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கடந்தமாதம் 13–ந் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இராணி இம்மாதம் 12–ந்தேதி மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள நாடார் இனமக்களின் ஆடைகள் பற்றி எழுதப்பட்டது முழுமையாக நீக்கப்பட்டது.

சமூக மாற்றத்திற்கு போராடியவர்கள் அந்தகாலத்தில் மேற்கொண்ட தோள்சீலை போராட்டம் குறித்து சேர்க்கப்படுகிறது.

அய்யா வைகுண்டசாமி குறித்து மாணவர்கள் மேலும் தகவல்களை அறிந்துகொள்ளும்படி பயிற்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நாடார் இன மக்கள் வேறு பலதொழில்களில் ஈடுபட்டிருப்பதை குறித்தும் தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இது தவிர 1921–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின் படி நாடார் என்ற சொல் இந்த சமூகத்தைச் சார்ந்த எல்லோரையும் குறிக்கும்படி ஒரு தனிகுறிப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் இந்த பாடப்புத்தகத்தின் என்.சி.இ.ஆர்.டி. முழு ஒப்புதலுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் இதேமாற்றங்கள் என்.சி.இ.ஆர்.டி. வலைதளத்தில் உள்ள பாடபுத்தகத்திலும் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிறது என்பதை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி, எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார்.

நாடார் இனமக்களின் உணர்வுகளுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனின் அலுவலக செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...