ஜம்முகாஷ்மீர் சாலை சீரமைப்புக்கு ரூ. 200 கோடி

 மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் குடி நீர் வசதிகளை செய்துகொடுக்க ரூ. 200 கோடி அம்மாநிலத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்ததால் அங்குள்ள அனைத்து நதிகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்திற்கு 270க்கும் அதிகமானோர் பலியானார்கள். மாநிலத்தில் 2,000–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம்புகுந்தது. இதனால் காஷ்மீர் பலத்தசேதம் அடைந்தது. ராணுவ வீரர்கள் தவிர மற்றயாரும் மீட்பு பணியில் ஈடுபடாத நிலைமை ஏற்பட்டது. வெள்ளத்தினால் கடுமையான பாதிப்பை சந்தித்த ஜம்மூகாஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பிவருகிறது.

வெள்ளம் காரணமாக மாநிலத்தின் முக்கியசாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஹெலிகாப்படரில் பார்வையிட்டார். அவருடன் பிரதம அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் உடன் சென்றார். வெள்ளம் பாதித்தபகுதிகளை பார்வையிட்ட நிதின் கட்காரி முதல்-மந்திரி ஒமர் அப்துல்லாவை சந்தித்து நிவாரணப்பணிகள் குறித்து பேசினார். சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதின்கட்காரி, காஷ்மீர் மாநில முதல்மந்திரி ஒமரின் கோரிக்கையை ஏற்று ரூ. 225 கோடி காஷ்மீருக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். மாநிலத்தில் குடி நீர் பிரச்னையை தீர்க்கவும், தடைபட்டுள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் செயல் படுத்தவும் மாநில அரசுக்கு உதவிகள் வழங்கப்படும். சாலைகள் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 125 கோடி வழங்கப்படும். குடிநீர் வசதிகளை செய்துகொடுக்க ரூ. 60 கோடி வழங்கப்படும். ஜம்முகாஷ்மீரில் கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க முன்னுரிமை வழங்கப்படும். மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனைத்து கூடுதல் உதவிகளையும் செய்யும். என்று நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...