'மேக் இன் இந்தியா' பிரசாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அதற்காக வடிவமைக்கப் பட்ட சிங்கம் 'லோகோ.,வை வெளியிட்டார்.
இந்தியாவில் தயாராகும் பொருட்களை உலகம்முழுவதும் அறியச்செய்யும் வகையில் "மேக் இன் இந்தியா" என்ற பெயரிலான பிரசாரத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தவிழாவில் சர்வதேச மற்றும் இந்திய தொழிலதிபர்கள், தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேக்இன் இந்தியா பிரசாரத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசும்போது, "முதலீடுகள் இந்தியாவை விட்டுச்செல்வதை மத்திய அரசு விரும்பவில்லை. அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறும் நிலை இருந்தது. இந்தியாவிலிருந்து எந்தநிறுவனமும் வெளியேற மத்திய அரசு விரும்பவில்லை. முந்தைய அரசின் கொள்கைகள்மீது அன்னிய நிறுவனங்களுக்கு அச்ச உணர்வு இருந்தது. மத்திய அரசின் கொள்கைகள் மீது இந்திய தொழில் துறை நம்பிக்கை வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 120 கோடிமக்கள் மீது தொழில்துறை நம்பிக்க்கை வைக்கவேண்டும்.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். அந்தவகையில் மத்திய அரசை பொறுத்தவரை எப்.டி.ஐ. என்பது 'ஃபர்ஸ்ட் டெவலப் இந்தியா' என்பதாகும். இந்தியாவில் தயாராகும் பொருட்களை உலகம்முழுவதும் அறிமுகப்படுத்துவதற்காக இந்த பிரசாரம். அரசியல் ஆதாயத்திற்காக இந்த பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. மேலும், இந்தபிரசாரம் குறித்து விமர்சனங்கள் இருக்கின்றன. சலுகைகளால் எந்தபயனும் இல்லை. திறனை மேம்படுத்துவது குறித்து இளைய தலை முறையினருக்கு பயிற்சி அளிக்கவேண்டும்" என்றார்.
முன்னதாக வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசுகையில், "மேக் இன் இந்தியா என்பதே நமது கனவுதிட்டம் ஆகும். இதனை நிறைவேற்ற வர்த்தக ரீதியிலான அனைத்து எளியவகைகளும் வழிசெய்து தரப்படும். தொழில் துவங்குவதில் யாருக்கும், எந்த ஒரு இடையூறும் இருக்காது
பிரதமரின் லட்சியதிட்டமான 'மேக் இன் இந்தியா' பிரசார திட்டம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது. புதிய நவீன தொழில்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். இந்தியாவில் தொழில்தொடங்கிட ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துவங்க முன்வருவோருக்கு 72 மணி நேரத்தில் அனுமதி தரப்படும் .
அன்னிய முதலீட்டை பெருக்கிட போதிய நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. தொழில் துவங்குவதில் இருக்கும் சிவப்பு அளவுகோல் அகற்றப்பட்டு சிவப்புகம்பள வரவேற்பு அளிக்ககப்படும்" என்றார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.