ஒபாமாவை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினார்

 வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, தலைவர்கள் இருவரும் புதன்கிழமை (அக்.1) அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளிடையேயான பொருளாதார, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதுகுறித்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மோடியை, ஒபாமா நேரில்வரவேற்றார். அப்போது மோடியிடம், அவரது தாய் மொழியான குஜராத்தியில், "எப்படி உள்ளீர்கள்?' என்று ஒபாமா நலம் விசாரித்தார். அதற்கு அவரிடம் "மிகவும் நன்றி, அதிபர்' என்று மோடி தெரிவித்தார்.

விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜோபிடன், வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். ஒபாமாவின் மனைவி மிஷல் வெளியூர் சென்றிருந்ததால், இதில் பங்கேற்க இயலவில்லை.

பிரதமர் மோடி, நவராத்திரி விரதம் இருந்தகாரணத்தால், உணவு எதையும் எடுத்து கொள்ளவில்லை. சூடான குடிநீர்மட்டுமே அவர் பருகினார்.

இந்தச் சந்திப்பின் போது, தொழில்நுட்பம், மின்னனு நிர்வாகம், ஆப்கானிஸ்தான் விவகாரம், எபோலா நோய் உள்ளிட்டவை குறித்து ஒபாமாவும், மோடியும் பேசினர். ஒபாமாவுக்கு தனது தனிப்பட்ட பரிசுகளாக மகாத்மாகாந்தி தொகுத்த "கீதா பை காந்தி' என்ற புத்தகத்தையும், மறைந்த அமெரிக்கத் தலைவர் மார்டின் லூதர்கிங் இந்தியா வந்தபோது எடுக்கப்பட்ட புகைப் படம், அவரது ஒளி, ஒலிகள் அடங்கிய பதிவுகளை மோடி அன்பளிப்புகளாக வழங்கினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...