அன்று அயோத்தியில் மத சகிப்பு தன்மையுடன் செயல்பட்ட ஒரு நவாப்; இன்று?

அயோத்தியை முன்னிறுத்தி, ஒளத் என்ற பெயரில் தோற்று விக்கப்பட்ட சமஸ்தானம் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் முகலாய ஆட்சி பலவீனமடையலானதும் சுயேச்சையாக இயங்கத் தொடங்கியது. அதுவரை நவாப் வஜீர் என்ற பட்டத்துடன் ஒளத்தின் ஆளுநராக நிர்வாகம் செய்தவர்கள் நவாபாகவே அரசாளத் தொடங்கினார்கள். 

இந்த ஒளத் சமஸ்தான நவாப்களின் பூர்விகம் பாரசீகம் (இன்றைய .ஈரான்). இவர்கள் முகமதியரேயானாலும் கலாசார வழியில் பாரசீகர்கள். குறிப்பாக ஷியாக்கள். பாரசீகம் அராபியரின் மூர்க்கத்தனமான ஆக்ரமிப்புக்கு இரையாகி வலுக்கட்டாயமாக முகமதியம் திணிக்கப்பட்ட பிரதேசம். அராபிய ஆக்ரமிப்பிலிருந்து தங்கள் கலாசாரத்தையும் சமய நம்பிக்கையினையும் தற்காத்துக் கொள்ளத் தப்பி வந்து ஹிந்துஸ்தானத்தின் குஜராத்தில் கரை ஒதுங்கிய பாரசீகர்களுக்கு நமது பாரம்பரியப் பண்பிற்கு இணங்க அடைக்கலம் கொடுத்து அரவணைத்தோம். அவர்கள் மறு வாழ்வு பெற உதவியதோடு தங்கள் சமய நம்பிக்கையினையும் சமூக நெறியினையும் தங்கு த்டையின்றிக் கடைப்பிடிக்கவும் அனுமதி அளித்தோம். அவர்களே இன்று பார்ஸிகள் என்ற பெயரில் தமது தனித்துவத்தை இழந்துவிடாமல் நீடித்து வருகிறார்கள். ஆக, தொன்மையான பாரசீகக் கலாசாரமும் தீயை வழிபடும் ஜோராஷ்ட்ரிய சமய நம்பிக்கையும் இன்றளவும் உலகில் நீடித்திருக்க முடிந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் ஹிந்துஸ்தானத்தின் பரிவுணர்வும், பெருந்தன்மையும்தாம். 
முகமதியராக மதம் மாற்றப்பட்ட பாரசீகர்களும், தாய் நாட்டிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாய் உரிமைகள் இன்றி வாழ்ந்து சலித்து நிர்பந்தம் காரணமாகத் தாமாகவே முகமதியராக மதம் மாறிய பாரசீகர்களும் தொடக்கத்தில் தமது கலாசாரப் பண்பிற்கு ஏற்ப சகிப்புத் தன்மையும் மாற்றுச் சமயத்தினரிடம் நட்பு பாராட்டும் இயல்பும் உள்ளவர்களாகவே இருந்தனர். படிப்படியாகத்தான் .அவர்களும் தாம் சார்ந்த மதத்தின் நடைமுறைகளுடன் முற்றிலும் ஒன்றிப்போனார்கள். எனினும் ஒருசிலர் தங்களுடைய பாரசீகப் பாரம்பரிய வாசனையை ஓரளவுக்கெனும் நிலை நிறுத்தி வந்துள்ளனர். அத்தகைய ஒரு சிலரில் நவாப் வாஜித் அலி ஷாவும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 
1847-ல் அரியணை ஏறிய வாஜித் அலி ஷா 1856 வரை ஒளத் சமஸ்தானத்தின் நவாபாக ஒரு சில அதிகாரங்களுடன் பெயரளவிலேனும் அரசராக நீடித்தார். அதன் பிறகு அவர் அரசாளத் தகுதியற்றவர் என்று கிழக்கிந்தியக் கம்பெனியாரால் முத்திரை குத்தப்பட்டு அரிணையிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டார். ஆண்டுக்கு இருபது லட்சம் ரூபா அரச மானியம் தருவதாகக் கூறி கம்பனியார் அவரை லட்சுமணபுரியிலிருந்தே வெளியேற்றி கொல்கத்தாவில் குடியேறச் செய்தனர். 
வாஜித் அலி ஷா என்கிற ஷியா பிரிவு முகமதிய அரசரைப்பற்றி இவ்வளவு விரிவாகக் கூறக் காரணம் அவர் சிற்றின்பப் பிரியராக இருந்த போதிலும் கலைஞர்களையும் கைவினைத் திறனாளி களையும் ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதோடு ஹிந்து கலாசாரத்தைக் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். தீபாவளியையும் ஹோலி பண்டிகையையும் கொண்டாடுவதில் வாஜித் அலிக்கு விருப்பம் அதிகம். நவாபே ஹிந்துக்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதால் சமஸ் தானத்தில் உள்ள முகமதியரில் பெரும்பாலானோரும் அவ்வாறே கொண்டாடினர். ஹிந்துக்களும் பதிலுக்கு மொஹரம் பண்டிகை யின்போது பஞசாவை வைத்து மரியாதை செலுத்தினார்கள். 
ராதையையும் க்ருஷ்ணரையும் கதாபாத்திரங்களாக வைத்து இசை நாடகங்கள் நடத்துவது, தானே கவிதை எழுதுவது, கதக் நாட்டியம் கற்பது என வாஜித் அலி ஹிந்து கலாசாரத்துடன் மிகவும் இணக்கமாக இருந்தார். 
அயோத்தியில் ஹனுமான் கர்ஹி (க்ரஹி எனபதுதான் பேச்சு வழக்கில் கர்ஹி என்றானது, பேச்சு வழக்கில் மதுரை மருதையாவது போல!) என்ற இடத்தில் பல ஆலயங்கள் இருந்து வருகின்றன. வாஜித் அலி காலத்தில் அந்த இடத்தை ஆக்ரமித்துக்கொள்ளத் திட்டமிட்ட சில முகமதியர்கள், அங்கு ஒரு மசூதி இருந்ததாகவும் அதை ஹிந்துக்கள் இடித்து விட்டதாகவும் புரளி கிளப்பிக் கலவரத்திலும் ஈடுபட்டனர். ஹிந்துக்கள் மிகுதியாக உள்ள ஹனுமான் கர்ஹிக்குப் பெரும் படை திரட்டிக்கொண்டு சென்ற முகமதியரை ஹிந்துக்கள் விரட்டியடித்தனர். கைகலப்பில் பன்னிரண்டு ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். முகமதியர் தரப்பில் உயிர்ச் சேதம் அதிகம். சாவு எண்ணிக்கை எழுபது. முகமதியர் கலவரத்தைக் கைவிட்டு நவாப் தர்பாரில் முறையிட்டனர். 
புகாரை விசாரித்த நவாப் வாஜித் அலி ஷா, ஹனுமான் கர்ஹியில் ஒரு மசூதி இருந்ததா, அது அங்குள்ள ஹிந்துக்களால் இடிக்கப்பட்டதா என்று விசாரிக்க மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்தார். முகமதியர் சார்பில் பைசாபாத் நஜீம் ஆகாஅலிகான், இந்துக்கள் சார்பில் ராஜா மான்சிங், கிழக்கிந்தியக் கம்பெனியின் மேற்பார்வையில் சமஸ்தானம் இயங்கி வந்ததால் அதன் சார்பில் கேப்டன் ஓர் என்ற ஆங்கிலேயர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமனம் பெற்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தீர விசாரித்ததில் ஹனுமான் கர்ஹியில் மசூதி எதுவும் இருக்கவில்லை, அது இடிக்கப்படவுமில்லை எனத் தெரிய வந்தது. விசாரணைக் குழுவினர் தாம் கண்டறிந்த உண்மையின் அடிப்படையில் ஹிந்து-முகமதியர் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து ஹனுமான் கர்ஹியில் மசூதி எதுவும் இருக்கவில்லை அது இடிக்கப்படவுமில்லை என எழுதி இரு தரப்பாரின் பிரதிநிதிகளூம் அதில் கையொப்பமிடச் செய்தனர்.. 
அத்துடன் பிரச்சினை தீர்ந்தது என்று நவாப் வாஜித் அலி கருதியிருக்கையில் மவுல்வி அமீர் அலி என்ற மத வெறியன் ஹனுமான் கர்ஹி ஹிந்துக்கள் மீது ஜிஹாத் நடத்தி அங்கு ஒரு மசூதியைக் கட்டப்போவதாகச் சூளுரைத்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு அயோத்திக்குப் புறப்பட்டான். வாஜித் அலி இதைக் கேள்விப்பட்டதும் தலைமை மத குருமார்களையும் முகமதிய மார்க்க அறிஞர்களையும் கலந்தாலோசித்தார். ஹிந்துக்களின் ஆலயங்களுக்கு நடுவே வீம்புக்காக மசூதி கட்டத் தேவை யில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். அதையே ஒரு பத்வாவாக அறிவிக்கச் செய்து சிப்பாய்களை அனுப்பி மவுல்வி அமீர் அலியையும் அவன் திரட்டிச் சென்ற ஆட்களையும் தடுத்து நிறுத்தச் செய்தார். அமீரும் அவனது ஆட்களும் நவாபின் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்து சிப்பாய்களுடன் மோதினர். அதில் அமீர் அலி கொல்லப்பட்டான். அவன் ஆட்களும் சிதறி ஓடினர். பிரச்சினை அத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது. 
இவ்வாறாக அயோத்தியில் ஒரு நவாப் காலத்தில் நியாயம் ஹிந்துக்கள் பக்கம் இருந்ததால் அவர்களுக்குச் சாதகமான முடிவு உடனுக்குடன் எடுக்கப்பட்டது. ஆனால் அதே அயோத்தியில் 1947-க்குப் பிறகு சுதந்திர பாரதத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களோ, ஸ்ரீ ராம ஜன்மஸ்தானத்தில் இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ராமபிரான் கோயிலை இடித்துக் கட்டப்பட்ட பாப்ரி மண்டபம் அகற்றப்பட்டு, அங்கு மீண்டும் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்ற ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை! சிவில் கோர்ட்டில் தீர்க்கப்பட வேண்டியது போன்ற பங்காளிகளிடையிலான வரப்புத் தகராறு மாதிரிதான் அவர்களின் பார்வைக்கு இந்த மானப் பிரச்சினை தென்பட்டது! 
மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்துவிட்டிருந்த அத்தருணத்தில், ஹிந்துஸ்தானத்தில் தங்கிவிட்ட முமதியரிடமிருந்து எவ்வித எதிர்ப்புமின்றி வெகு எளிதாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்ர்வு கண்டிருக்க முடியும். ஆனால் முளையிலேயே கிள்ளி எறியக் கூடியதை பெரும் மரமாக வளரச் செய்து அனாவசியமாகப் பெரும் சேதங்களும், மனஸ்தாபங்களும் இடம் பெறச் செய்ததுதான் மதச் சார்பின்மை என்ற முகமூடி தரித்து, சுதந்திர பாரதத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களின் சாதனை!

நன்றி;- மலர்மன்னன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...